search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் - வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டு இணைப்பதற்கு தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சியினர் எதிர்ப்பு
    X

    நாகர்கோவிலில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் - வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டு இணைப்பதற்கு தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சியினர் எதிர்ப்பு

    • வாக்காளர் அடையாள அட்டையில் அவர்களது ஆதார் கார்டு இணைக்கும் போது வேறு முகவரி இருக்கும்
    • வாக்காளர் பட்டியலில் ஆதார் கார்டு இணைக்கும் முயற்சியை கைவிட வேண்டும்

    நாகர்கோவில்:

    வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டு இணைப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது.

    கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார்.மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை, நாகர்கோவில் ஆர்.டி.ஒ. சேதுராமலிங்கம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் வீராசாமி தாசில்தார்கள் சுசீலா, சேகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் ஜெயகோபால், தி.மு.க. சார்பில் ஆனந்த், வீர வர்க்கீஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் மனோகர ஜஸ்டஸ், பாரதிய ஜனதா சார்பில் ஜெகதீசன், தேமு.தி.க. சார்பில் செல்வகுமார் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டு இணைப்பு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது தி.மு.க., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டு இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொது மக்கள் வெளியூர்களில் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் அந்த பகுதிகளில் ஆதார் கார்டு மற்றும் வீட்டு முகவரி பான் கார்டுகளை வாங்கி வைத்துள்ளார்கள். ஓட்டுரிமையை மட்டும் சொந்த ஊரில் வைத்திருப்பார்கள்.

    தற்பொழுது வாக்காளர் அடையாள அட்டையில் அவர்களது ஆதார் கார்டு இணைக்கும் போது வேறு முகவரி இருக்கும். இதனால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே வாக்காளர் பட்டியலில் ஆதார் கார்டு இணைக்கும் முயற்சியை கைவிட வேண்டும்

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அ.தி.மு.க. ஜெயகோபால் பேசுகையில், நாகர்கோவில் மாநகரப் பகுதியில் வார்டுகள் மறுசீரமைப்புக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் உள்ளது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    அரசியல் கட்சியினர் கருத்துக் கள் தொடர்பாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அரவிந்த் உறுதி அளித்தார்.

    Next Story
    ×