என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாகர்கோவிலில் நாளை நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.வினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் - அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழகச் செயலாளர் ஜெஸீம் வேண்டுகோள்
- தி.மு.க. அரசின் வீட்டு வரி உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் தலைமை தாங்குகிறார்.முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் தலைமை தாங்குகிறார்.
கன்னியாகுமரி :
அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஜெஸீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் ஆணைப்படி தி.மு.க. அரசின் வீட்டு வரி உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் தலைமை தாங்குகிறார்.
வீட்டு வரி உயர்வு முதல் மின் கட்டண உயர்வு வரை தமிழக மக்களை வாட்டி வதைக்கும் தி.மு.க. அரசை கண்டித்து நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்துக்குட்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர் ஊராட்சி கிளை கழக சார்பு அணி நிர்வாகிகள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகள் கழக உடன் பிறப்புகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளும்படி அகஸதீஸ்வரம் ஒன்றிய கழகம் சார்பாக கேட்டுக் கொள்கிறன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்