search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை மாநாடு குறித்து அ.தி.மு.க. சார்பில் தெருமுனை பிரசாரம்
    X

    மதுரை மாநாடு குறித்து அ.தி.மு.க. சார்பில் தெருமுனை பிரசாரம்

    • குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் நடந்தது
    • பொதுமக்கள் அதிகமாக கலந்துகொள்ள கேட்டு சேவியர் மனோகரன் விளக்க உரையாற்றினார்

    கன்னியாகுமரி :

    மதுரையில் அ.தி.மு.க. பொன் விழா மாநாடு வருகிற 20-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள கேட்டு குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் குளச்சல் நகர அ.தி.மு.க. சார்பில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.

    குளச்சல் நகர அ.தி.மு.க. செயலாளர் ஆண்ட்ரூஸ் தலைமை தாங்கினார். குளச்சல் நகராட்சி கவுன்சிலர் ஆறுமுக ராஜா, ஆனகுழி சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநாட்டை விளக்கி பொதுமக்கள் அதிகமாக கலந்துகொள்ள கேட்டு தமிழ்நாடு மீனவர் கூட்டுறவு பெருந்தலைவரும், மாவட்ட அவை தலைவருமான சேவியர் மனோகரன் விளக்க உரையாற்றினார். நாகர்கோவில் முன்னாள் நகர செயலாளர் சந்துரு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எஸ்.எம்.பிள்ளை மற்றும் பேரூர் செயலாளர்கள் ஏரோணி மூஸ், அகஸ்டின், உபால்டு மலுக்கு, லூயிஸ், அமலதாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×