என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாகர்கோவிலில் விபத்து
நாகர்கோவில்:
நாகர்கோவில் இடலாக்குடி பறக்கை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரஹீம். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் ஹிஷாம் அகமது (வயது 17).
இவர் இடலாக்குடியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். ஹிஷாம் அகமது தினமும் காலையில் செட்டிக்குளம் பகுதியில் டியூசனுக்கு வருவது வழக்கம். நேற்று காலையில் மோட்டார் சைக்கிளில் டியூசனுக்கு வந்தார்.
பின்னர் டியூசனில் இருந்து வீட்டுக்கு சென்ற போது கோட்டார் சிதம்பர நகரை சேர்ந்த அவரது நண்பர் ஆகாஷ் (17) என்பவரை அழைத்துக் கொண்டு புறப்பட்டார். செட்டிகுளம்-பீச் ரோடு சாலையில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டி ருந்தபோது ஹிஷாம் அகமது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் தாறுமாறாக ஓடியது.
அப்போது சாலை ஓரமாக சென்று கொண்டிருந்த தம்மத்துகோணத்தை சேர்ந்த பால்சுதாகர் (50) என்பவர் மீது மோதியது. மோட்டார் சைக்கிள் வந்த வேகத்தில் அரசு பஸ் மீதும் மோதியதில்ஹிஷாம் அகமது, ஆகாஷ் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
படுகாயம் அடைந்த ஹிஷாம் அகமது, ஆகாஷ், பால்சுதாகர் ஆகியோரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஹிஷாம் அகமது பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் ஹிஷாம் அகமது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த ஆகாஷ் சிகிச்சைக்காக நாகர்கோவிலில்உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
பால் சுதாகரை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர் த்து சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பால் சுதாகர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இன்று பலியான ஹிஷாம் அகமது, பால் சுதாகரின் உடல்கள் பிரேத பரிசோதனை நடக்கிறது. விபத்து குறித்து போக்குவரத்து பிரிவு போலீசார் பலியான ஹிஷாம் அகமது மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வந்ததாக அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு
ள்ளது. இதற்கிடையில் விபத்து நடந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தற்பொழுது சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளங்களிலும் பரவத் தொடங்கியுள்ளது.
பால் சுதாகர் மீது மோதிய வேகத்தில் அந்த வழியாக வந்தவர் பஸ் மீது மோதுவது போன்ற காட்சிகள் வைரலாக தொடங்கியுள்ளது. அந்த காட்சிகள் நெஞ்சை பதற வைக்கும் வகையில் உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்