search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்கலை அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
    X

    தக்கலை அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo

    தக்கலை :

    தக்கலை அருகே அழகியமண்டபம் பொந்தன் பிலாவிளை பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 43), வேன் டிரைவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருடைய தந்தை மற்றும் தாயார் ஏற்கனவே இறந்து விட்டனர். இதனால் மது பழக்கத்துக்கு அடிமையான தினேஷ் கடந்த சில மாதங்களாக தக்கலை அருகே கோழிப் போர்விளை யில் தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று மதியம் வீட்டுக்குள் மதுவில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். மாலையில் அருகில் உள்ள நபர்கள் பார்த்த போது வாயில் நுரை தள்ளியபடி தினேஷ் கிடந்துள்ளார். உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்கப் பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ் பரிதாபமாக இறந்தார்.

    இது சம்பந்தமாக அவரது சகோதரி, தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×