என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

தக்கலை அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

தக்கலை :
தக்கலை அருகே அழகியமண்டபம் பொந்தன் பிலாவிளை பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 43), வேன் டிரைவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருடைய தந்தை மற்றும் தாயார் ஏற்கனவே இறந்து விட்டனர். இதனால் மது பழக்கத்துக்கு அடிமையான தினேஷ் கடந்த சில மாதங்களாக தக்கலை அருகே கோழிப் போர்விளை யில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் வீட்டுக்குள் மதுவில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். மாலையில் அருகில் உள்ள நபர்கள் பார்த்த போது வாயில் நுரை தள்ளியபடி தினேஷ் கிடந்துள்ளார். உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்கப் பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ் பரிதாபமாக இறந்தார்.
இது சம்பந்தமாக அவரது சகோதரி, தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
