search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் அருகே குளத்தில் பிணமாக மிதந்த இளம்பெண்
    X

    இரணியல் அருகே குளத்தில் பிணமாக மிதந்த இளம்பெண்

    • சாவில் சந்தேகம் இருப்பதாக தாயார் புகார்
    • திருமணம் நடந்து 4 ஆண்டுகளே ஆவதால், ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த உள்ளார்

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே உள்ள குருந்தன்கோட்டை அடுத்த தாழத்துவிளையை சேர்ந்தவர் ராஜேஷ், கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சித்ரா (வயது 37).

    இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 3.30 மணி அளவில் அப்பகுதியில் உள்ள காடேற்றி குளத்தில் சித்ரா பிணமாக கிடந்துள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெய்யூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சித்ரா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் சித்ரா சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் கமலம், இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் குளச்சல் துணை சூப்பிரண்டு தங்கராமன், இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார்

    விசாரணை நடத்தினர். ஏற்கனவே ராஜேஷ் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக சித்ரா மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து இருப்பதாக தெரிகிறது.

    ராஜேஷ், சித்ரா திருமணம் நடந்து 4 ஆண்டுகளே ஆவதால், தக்கலை பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த உள்ளார். பிரேத பரிசோதனைக்கு பின்னர் தான் சித்ரா எப்படி இறந்தார் என்பது தெரியவரும். திருமணம் நடந்து 4 ஆண்டுகளுக்குள் இளம்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×