search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கேரளாவிற்கு கனிம வளம் கடத்திய லாரி மேம்பாலத்தில் மோதி விபத்து
    X

    கேரளாவிற்கு கனிம வளம் கடத்திய லாரி மேம்பாலத்தில் மோதி விபத்து

    • முன் பக்க சக்கரங்கள் உடைந்து தெறித்தன
    • கனரக லாரிகளை கட்டுப்படுத்தவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    கேரள மாநிலத்திற்கு குமரி மாவட்டம் வழியாக பல்வேறு இடங்களில் இருந்து கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருகிறது. மேலும் முறையான அனுமதியின்றி அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி கொண்டு செல்லப்படுகிறது.

    இதனை தடுத்து நிறுத்தும் படி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால் கடத்தல் சம்பவம் தொடர்ந்து வருகிறது.

    இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மரண பயத்துடன் செல்கின்ற னர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு கேரளாவுக்கு கனிம வளங்களை கொண்டு செல்வதில் யார் முந்தி செல்வது என்ற போட்டியில் ராதாபுரத்தில் இருந்து வந்த கனரக லாரி, மார்த்தாண்டம் மேம்பாலம் தொடங்கும் பகுதியில் மோதியது.

    இதில் மேம்பாலத்தின் நுழைவாயிலில் இருந்த பெயர் பலகை துண்டானது. மேலும் டாரஸ் லாரி யின் முன் பக்க 2 சக்க ரங்களும் துண்டாகி சென்று உள்ளது. லாரியின் முன்பக்கம் முழுவதும் கடுமையாக சிதைந்து சேதமடைந்து உள்ளது.

    இந்தச் சம்பவத்தில் லாரியை ஓட்டி வந்த ஜெயராஜ் (வயது 42) காயம் அடைந்தார். அவரை லாரியின் உரிமை யாளர் மற்றும் சக டிரைவர்கள் அங்கிருந்து காரில் அழைத்துச் சென்று திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    மேலும் லாரியில் துண்டான 2 சக்கரங்க ளையும் கிரேன் மூலம் தூக்கி இரவோடு இரவாக அகற்றியதோடு லாரியையும் சாலை ஓரத்தில் ஒதுக்கி உள்ளனர்.

    மேலும் 30 அடி உயரம் உள்ள பெயர் பலகையையும் கிரேன் மூலம் தூக்கி சாலை ஓரத்திற்கு மாற்றி வைத்துவிட்டு அப்பகுதியில் விபத்து நடக்காதது போன்று மாற்றி வைத்துள்ளனர்.

    மேலும் சாலை முழுவதும் லாரியில் இருந்த ஆயில் கொட்டி உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் சென்ற பலர் வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகினர்.

    விபத்து சம்பவம் நடந்த பிறகும் சம்பந்தப்பட்ட நிர்வாகமோ அல்லது போலீசாரோ கனரக லாரிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    Next Story
    ×