என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆரல்வாய்மொழியில் ரவுடிக்கு பீர் பாட்டில் அடி
- பெண் விஷயமாக முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது
- போலீசார் விசாரணை நடத்தி தந்தை-மகன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
கன்னியாகுமரி :
ஆரல்வாய்மொழி கிறிஸ்துநகரை சேர்ந்தவர் சுவாமிநாதன். இவரது மகன் அன்பு (வயது 37).
இவர் மீது குமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. அன்புக்கும் அதே ஊரை சேர்ந்த ஏசுதாசன் என்பவருக்கும் பெண் விஷயமாக முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அன்பு ஆரல்வாய்மொழி பஞ்சாயத்து அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஏசுதாசன் மற்றும் அவரது மகன் சுதன் ஆகியோர் வந்தனர். அவர்களுக்கும் அன்புவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அன்பு பீர் பாட்டிலால் தாக்கப்பட்டு உள்ளார். காயம் அடைந்த அவர், ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி தந்தை-மகன் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






