search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொக்கோடு-பழவண்டான்கோணம் இடையே ரெயில்வே மேம்பாலம் அமைத்து தர வேண்டும்
    X

    கொக்கோடு-பழவண்டான்கோணம் இடையே ரெயில்வே மேம்பாலம் அமைத்து தர வேண்டும்

    • குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்
    • 44 ஆண்டுகள் போராடியும் எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை

    கன்னியாகுமரி :

    குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பேரூர் செயலா ளர்கள் கூட்டம் திங்கள்ந கரில் நடந்தது. ஒன்றிய அவைத்தலைவர் ஆன்றோ சர்ச்சில் தலைமை தாங்கி னார். பொருளாளர் ஏசுரத்தினராஜ் வரவே ற்றார். செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா சிறப்பு விருந்தி னராக கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் ஜாண்லீபன், பேரூர் செயலா ளர்கள் ரெஜூலின் ராஜகுமார், சுஜெய்ஜா க்ஸன், சகாய கிறிஸ்துதாஸ், செல்வதாஸ், நெய்யூர் பேரூராட்சி தலைவர் பிரதீபா, மாவட்ட பிரதிநி திகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தலைமை கழகம் அறிவுறுத்தி உள்ளபடி கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் 23 அணிகளின் சார்பிலும் அந்தந்த அணி களுக்கு என வழங்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகளை ஒன்றி யம் முழுவதும் நடத்துவது.

    திங்கள்நகர்- அழகிய மண்டபம் மாநில நெடுஞ்சா லை நெய்யூர்-பரம்பை பகுதியில் மெது வாக நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பாலப்ப ணிகளையும், தண்டவாளம் குறுக்கே தாழ்வாக கட்டப்ப ட்டு உள்ள புதிய இரணியல் கால்வாய் தொட்டி ப்பாலத்தில் தண்ணீர் ஓடி செல்லும் வகையில் தொட்டி பாலத்தை தூக்கி உயர்த்த ரெயில்வே மற்றும் பொதுப்பணித்துறையை கேட்டுக் கொள்வது.

    நெய்யூர் பேரூராட்சி நெய்யூர் வருவாய் கிராமத்தி ற்குட்பட்ட கொக்கோடு, பழவந்தான்கோணம், கண்ணோடு, இலந்தவிளை, பாளையம், ஆலங்கோடு உள்ளிட்ட கிராமங்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களை பிரிக்கி ன்ற வகையில் கொக்கோடு - பழவந்தான்கோணம் சாலை குறுக்கே நாகர்கோ வில் - திருவனந்தபுரம் ரெயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது. பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், நோயாளிகள், வேலைக்கு செல்பவர்கள், விவசாயிகள், ஆலயம், கோவில்களுக்கு சென்று வரும் பக்தர்கள் என தினம் தினம் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த தண்டவாள ங்களை தாண்டி செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இல்லை என்றால் சுமார் 10 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டும். இதனால் நேரவிரயம், பணவிரயம் ஏற்படுகிறது. இதற்கு ஒரே தீர்வான ரெயில்வே மேம்பா லம் அமைக்க இப்பகுதி மக்கள் தண்டவாளம் அமைக்கப்பட்ட 1979-ம் ஆண்டிலிருந்தே முயற்சிகள் எடுத்து வருகின்றனர். 44 ஆண்டுகள் போராடியும் எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை. எனவே மத்திய அரசும், ரெயில்வே நிர்வாகமும் கொக்கோடு - பழவந்தான்கோணம் இணைப்பு ரெயில்வே மேம்பாலத்தை உடனடியாக அமைக்க முன்வர வேண்டும். காலதாமதம் செய்தால் அப்பகுதி மக்களை ஒன்றிணைத்து தி.மு.க. தொடர் போராட்டங்களில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்ட முடிவில் திங்கள்நகர் பேரூர் செயலாளர் சேவியர் ஏசுதாஸ் நன்றி கூறினார்.

    Next Story
    ×