என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களியக்காவிளை அருகே மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் தொழிலாளி தற்கொலை
    X

    களியக்காவிளை அருகே மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் தொழிலாளி தற்கொலை

    • குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    களியக்காவிளை அருகே உள்ள எருத்தாவூர் பகுதியை சேர்ந்தவர் வின்ஸ் (வயது 50), தொழிலாளி. மது பழக்கத்திற்கு அடிமையான இவர், தினமும் குடித்து விட்டு வந்து மனைவி மற்றும் மகனிடம் தகராறு செய்துள்ளார்.

    இதனால் மனைவி மற்றும் மகன் பிரிந்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்தால் வின்ஸ் சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். சம்பவத்தன்று அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த அவர் கதவை சாத்தி விட்டு தூங்கி உள்ளார்.

    காலையில் அவரது வீட்டுக்கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வின்ஸ் வாயில் நுரை தள்ளியவாறு இறந்த நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்ப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வின்ஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வின்ஸ் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×