search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டார் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை
    X

    திருவட்டார் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை

    • கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்
    • போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவட்டார் :

    திருவட்டார் அருகே உள்ள திருவறம்பு கொல்வேர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெபமணி (வயது 47). செங்கல் சூளை தொழிலாளியான இவர், மனைவி-மகளை பிரிந்து தாயுடன் வசித்து வந்தார். மது பழக்கத்திற்கு அடிமையான ஜெபமணி, கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் வாயில் நுரை தள்ளிய நிலையில் அவர் மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, ஜெபமணி, மதுவில் விஷம் கலந்து குடித்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது தாய் பாய் கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×