என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆசாரிபள்ளத்தில் கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
- சதீஷின் மகன் ஒருவர் விபத்தில் இறந்துவிட்டார்.
- ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
நாகர்கோவில், ஜூலை.12-
நாகர்கோவில் ஆசாரி பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 40), கூலி தொழிலாளி. இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர் பிரிந்து சென்று விட்டார். சதீஷின் மகன் ஒருவர் விபத்தில் இறந்துவிட்டார்.
அதன்பிறகு சதீஷ் மனமடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் அவரது இன்னொரு மகனும் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் சதீஷ் மனவேதனை அடைந்தார்.
இந்த நிலையில் சம்பத்தன்று சதீஷ் மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதை பார்த்த அவரது உறவினர்கள் சதீஷை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும் சிகிச்சை பலனின்றி சதீஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான சதீஷின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் திரண்டு உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்