search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசாரிபள்ளத்தில் கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
    X

    ஆசாரிபள்ளத்தில் கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

    • சதீஷின் மகன் ஒருவர் விபத்தில் இறந்துவிட்டார்.
    • ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    நாகர்கோவில், ஜூலை.12-

    நாகர்கோவில் ஆசாரி பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 40), கூலி தொழிலாளி. இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர் பிரிந்து சென்று விட்டார். சதீஷின் மகன் ஒருவர் விபத்தில் இறந்துவிட்டார்.

    அதன்பிறகு சதீஷ் மனமடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் அவரது இன்னொரு மகனும் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் சதீஷ் மனவேதனை அடைந்தார்.

    இந்த நிலையில் சம்பத்தன்று சதீஷ் மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதை பார்த்த அவரது உறவினர்கள் சதீஷை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    எனினும் சிகிச்சை பலனின்றி சதீஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான சதீஷின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் திரண்டு உள்ளனர்.

    Next Story
    ×