search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் நிதி நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம்
    X

    தனியார் நிதி நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம்

    • நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
    • எந்தவிதமான தகவலும் கூறாமல் அனைத்து நகைகளையும் ஏலம் விட்டு விட்டதாக தெரிவித்துள்ளது

    நாகர்கோவில் :

    தக்கலை அருகே உள்ள குமாரகோயிலை சேர்ந்த கிருஷ்ணகுமார் வில்லுக்குறி யிலுள்ள ஒரு தனியார் நிதிநிறுவனத்தில் நகைக் கடன் எடுத்திருந்தார்.

    அடகு வைத்த நகைகளை திருப்புவதற்காக எதிர்தரப் பினரை தொடர்பு கொண்ட போது நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அசல் மற்றும் வட்டியினை செலுத்தி நகைகளை திருப்பி கொள்ளலாம் என தெரிவித்திருந்தனர். ஆனால் நுகர்வோருக்கு எந்த வித அறிவிப்பும் கொடுக்காமல் அடகு வைத்த நகைகளை ஏலத்தில் விடுவதற்கு முயற்சி செய்வ தாக தெரிய வந்துள்ளது.

    உடனே மனுதாரர் நகையை திருப்ப எவ்வளவு பணம் செலுத்த வேண்டு மென கணக்கு விபரம் தருமாறு நேரில் சென்றுள் ளார். ஆனால் அவரை அலைக்கழித்ததுடன் கணக்கு விபரத்தை கொடுக்கவில்லை. அதோடு எந்தவிதமான தகவலும் கூறாமல் அனைத்து நகைகளையும் ஏலம் விட்டு விட்டதாக நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஒரு சேவை குறைபாடு என்பதால் நுகர்வோர் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மனஉளைச்சலுக்கு ஆளான கிருஷ்ணகுமார் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகி யோர் தனியார் நிதி நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நஷ்ட ஈடு ரூ.5 லட்சம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5,000 ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் எனவும், மேலும் அடகு தொகையை பெற்றுக் கொண்டு நகைகளை உடனடியாக திரும்ப வழங்க வேண்டுமென உத்தர விட்டனர்.

    Next Story
    ×