search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தெங்கம்புதூரில் துணிக்கடையை உடைத்து கொள்ளை
    X

    தெங்கம்புதூரில் துணிக்கடையை உடைத்து கொள்ளை

    • சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீஸ் விசாரணை
    • சுசீந்திரம் பகுதியில் துணிக்கடை ஒன்றிலும் முகமூடி அணிந்து கொள்ளையன் கைவரிசை

    கன்னியாகுமரி :

    சுசீந்திரம் அருகே தெங்கம்புதூர் பகுதியை சேர்ந்தவர் முகமது அப்துல் காதர் (வயது 37). இவர் தெங்கம்புதூர் சந்திப்பில் துணிக்கடை வைத்துள்ளார். இவர் நேற்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இன்று காலை அவரது சகோதரர் ஒருவர் பக்கத்தில் உள்ள அவரது கடையை திறக்க வந்தபோது முகமது அப்துல் காதரின் கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது.

    இதனால் அதிர்ச்சி யடைந்த அவர் இது குறித்து முகமது அப்துல் காதருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர் கடைக்கு விரைந்து வந்தார். கடையின் ஷட்டர்களில் போடப்பட்டிருந்த 2 பூட்டுகளும் உடைக்கப்பட்டு இருந்தது. கடையில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தது. மேஜை டிராயரில் இருந்த பணம் திருடப்பட்டு இருந்தது.

    இது குறித்து சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாயும் கொண்டு வரப்பட்டது. கடையில் இருந்து மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடிய நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் முகமூடி அணிந்து கொள்ளையன் கைவரிசை காட்டுவது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்ட னர்.

    கடந்த மாதம் மணக்குடி பகுதியில் டாக்டர் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்தது. மேலும் சுசீந்திரம் பகுதியில் துணிக்கடை ஒன்றிலும் முகமூடி அணிந்து கொள்ளையன் கைவரிசை காட்டியிருந்தான். இது தொடர்பாக கேரளா ஆலப்புழாவை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு நெல்லை சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டிருந்தான்.

    அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சீர்திருத்த பள்ளியில் இருந்து தப்பி வந்துள்ளான். அவர்தான் இந்த கைவரிசையில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்று போலீசார் சந்திக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தனிப்படை போலீசார் இதுதொடர்பாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள னர்.

    Next Story
    ×