search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண்டைக்காடு அருகே தொழில் அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றம் - டி.எஸ்.பி. தலைமையில் இன்றும் நேரில் விசாரணை
    X

    மண்டைக்காடு அருகே தொழில் அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றம் - டி.எஸ்.பி. தலைமையில் இன்றும் நேரில் விசாரணை

    • வீட்டின் முன் ஜன்னல் கண்ணாடி உடைந்தது.ஜன்னல் அருகே போடப்பட்டிருந்த சோபா செட்டின் பிளாஸ்டிக் கவர் எரிந்து கருகியது. ஜன்னல் கீழ் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் எரிந்து சேத மடைந்தது
    • தற்போது இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.பிரிவு போலீசுக்கு மாற்றப் பட்டுள்ளது. மண்டைக்காடு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சி.பி.சி.ஐ.டி. பிரிவு போலீசாரிடம் ஒப்ப டைக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி :

    மண்டைக்காடு அருகே கருமங்கூடலை சேர்ந்தவர் தொழிலதிபர் கல்யாணசுந்தரம் (வயது 55).

    கடந்த அக்டோபர் மாதம் 25-ந்தேதி இரவு இவரது வீட்டுமுன்பு மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் வீட்டு காம்பவுண்டுக்குள் 2 பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பி சென்றனர். இதில் வீட்டின் முன் ஜன்னல் கண்ணாடி உடைந்தது.ஜன்னல் அருகே போடப்பட்டிருந்த சோபா செட்டின் பிளாஸ்டிக் கவர் எரிந்து கருகியது. ஜன்னல் கீழ் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் எரிந்து சேத மடைந்தது. வீட்டு முன் நிறுத்தப்பட்ட காரின் முன் பகுதியில் பெட்ரோல் கறை படிந்திருந்தது.

    குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் தலைமை யிலான போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.மண்டைக்காடு போலீசார் பெட்ரோல் குண்டு வீசிய தில் உடைந்து சிதறிய கண்ணாடி துண்டுகளை சேகரித்து எடுத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து கல்யாணசுந்தரம் மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார்.

    இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக குளச்சல் இலப்பைவிளை பகுதியை சேர்ந்த முஸ்ஸா மில் என்ற ஷமில்கான் (27) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட அவர் இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.

    பின்னர் கோர்ட்டு அனுமதி பெற்று குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையிலான போலீசார் இலப்பைவிளையில் உள்ள முஸ்ஸாமில் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில் போலீசார் அவரது வீட்டிலிருந்து ஒரு லேப்டாப் மற்றும் செல்போன் சிம் கார்டு உள்பட ஆவணங்களை எடுத்து சென்றனர்.

    இந்த வழக்கில் தொடர்புடையதாக மணவாளக்குறிச்சி ஆறான் விளையை சேர்ந்த அல்ரசிம் (22) என்ற கல்லுரி மாணவரையும், சாலத்திவிளையை சேர்ந்த கேட்டரிங் தொழிலாளி ரிஸ்வான் (27) ஆகியோரை மண்டைக்காடு போலீசார் கைது செய்தனர்.மேலும் இவ்வழக்கில் தலை மறைவாகி உள்ள ஆறான் விளை முகம்மது ராபின், ஆண்டார்விளை ஆதிலி மான் ஆகியோரை தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே கைது செய்யப்பட்ட குளச்சல் வாலிபர் முஸ்ஸாமில் என்ற ஷமில்கான் மீது கடந்த மாதம் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய மாவட்ட கலெக்டர் அரவிந்த் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.இதையடுத்து மண்டைக்காடு போலீசார் முஸ்ஸாமில் மீது தேசிய பாதுகாப்பு சட்ட பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்ததால் முஸ்ஸாமில் நாகர்கோவில் சிறையிலிருந்து பாளை யங்கோட்டை சிறைச்சா லைக்கு மாற்றப்பட்டார்.

    தற்போது இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.பிரிவு போலீசுக்கு மாற்றப் பட்டுள்ளது. மண்டைக்காடு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சி.பி.சி.ஐ.டி. பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. பிரிவின் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரையில் இருந்து டி.எஸ்.பி. வினோதினி தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் குமரி மாவட்டத்திற்கு வந்தனர். அவர்கள் கடந்த 2 நாட்களாக இங்கேயே முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர். இன்று கருமன்கூடல் பகுதியில் விசாரணை நடத்தினார்கள்.

    Next Story
    ×