search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருங்கல் அருகே குளத்தில் மூழ்கி 2 வயது குழந்தை பலி
    X

    ரிஸ்மிதா

    கருங்கல் அருகே குளத்தில் மூழ்கி 2 வயது குழந்தை பலி

    • விளையாடிக் கொண்டிருந்தபோது குளத்தில் தவறி விழுந்து பலியாகி இருக்கலாம்
    • கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கருங்கல் அருகே உள்ள பாலப்பள்ளம் வாழைத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப். இவர் கப்பலில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீஜா. இவர்களுக்கு சந்தீப் (வயது 12), சஞ்சய் (10) என்ற மகன்களும் ரிஸ்மிதா (2) என்ற மகளும் உண்டு.

    நேற்று ரிஸ்மிதா வீட்டின் அருகே விளையா டிக்கொண்டு இருந்தார். பின்னர் திடீரென குழந்தை காணாமல் மாயமானார். குழந்தையை காணாத ஸ்ரீஜா அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடினார். எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கருங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த கருங்கல் சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேஷ், சோபன ராஜ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

    குழந்தையை குறித்து எவ்வித தகவலும் கிடைக் காத நிலையில், இவர்களது வீட்டின் அருகே உள்ள குளத்தில் தேட முடிவு செய்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். குளச்சல் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் குளத்தில் நடத்திய தேடுதல் வேட்டையில் குழந்தை பிணமாக மீட்கப்பட்டார்.

    பிணத்தை கைப்பற்றிய கருங்கல் போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

    ரிஸ்மிதா விளையாடிக் கொண்டிருந்தபோது குளத்தில் தவறி விழுந்து பலியாகி இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×