search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சபரிமலை சீசனை முன்னிட்டு 10 நாட்களில் கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தை 73 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்
    X

    சபரிமலை சீசனை முன்னிட்டு 10 நாட்களில் கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தை 73 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்

    • ன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது
    • கடற்கரைப் பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துஇருந்தனர்.

    கன்னியாகுமரி கடலில் இன்றுஅதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து பரவசம் அடைந்தனர். அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலாபயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    கன்னியாகுமரி கடல்நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்டகியூவில் காத்திருந்தனர்.அவர்கள் காலை 8 மணியிலிருந்து படகில் ஆர்வத்துடன்பயணம்செய்துவிவேகானந்தர்மண்டபத்தைபார்வையிட்டுவந்தனர்.மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதனால் சுற்றுலாதலங்கள் களை கட்டியது. இந்தசுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுஇருந்தது.கடற்கரைப் பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வந்தனர். கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள விவேகானந்தர்நினைவு மண்டபத்தை சபரிமலை சீசன் தொடங்கிய கடந்த 1 7-ந்தேதி முதல்நேற்றுவரை கடந்த10நாட்களில் மட்டும் 73ஆயிரத்து14சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டுஉள்ளனர். கடந்த 17-ந்தேதி 5630 பேரும் 18-ந்தேதி 6725 பேரும் 19-ந்தேதி 8590 பேரும்20-ந்தேதி 8722 பேரும் 21-ந்தேதி 6597 பேரும் 22-ந்தேதி 6507 பேரும் 23-ந்தேதி 6969 பேரும் 24-ந்தேதி 7324 பேரும் 25-ந்தேதி 7052 பேரும் 26-ந்தேதியான நேற்று 8898 பேரும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டு உள்ளனர்.

    Next Story
    ×