search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேச்சிப்பாறையில் 41.8 மில்லி மீட்டர் மழை
    X

    பேச்சிப்பாறையில் 41.8 மில்லி மீட்டர் மழை

    • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1¾ அடி உயர்ந்தது
    • பேச்சிப்பாறை 41.8, பெருஞ்சாணி 15.4, சிற்றாறு 1-27.6, சிற்றார் 2-12.8, களியல் 3.8, கன்னிமார் 2.4

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ என இரு போக சாகுபடிகள் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணை தண்ணீரை நம்பியும், பாசன குளங் களை நம்பியும் சாகுபடி செய்து வருகிறார்கள்.

    தென்மேற்கு பருவமழை பொய்த்து போன கார ணத்தினால் பாசன குளங்களிலும், அணைகளிலும் நீர்மட்டம் குறைவாக காணப்பட்டது. கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாமல் நெற்பயிர்கள் கருகும் நிலையில் இருந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து இருந்த னர்.

    இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் கடந்த 3 வாரங்களாக பரவலாக தினமும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பாசன குளங்களும் நிரம்பி வருகிறது. இதனால் விவசா யிகள் மகிழ்ச்சி அடைந்துள் னனர். தொடர்ந்து பெய்து வரும் மழையை நம்பி விவசாயிகள் கும்பப்பூ சாகுபடி பணியில் தீவிர மாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    சுசீந்திரம், பறக்கை, பூதப்பாண்டி பகுதிகளில் சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகளுக்கு தேவை யான விதை நெல்களை தங்கு தடையின்றி வேளாண் துறை அதிகாரிகள் வழங்கி வருகிறார்கள். பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியில் நேற்றும் கனமழை கொட்டி தீர்த்தது.

    பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 41.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மழையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் ¾ அடியும் பெருஞ் சாணி அணை நீர்மட்டம் 1¾ அடியும் உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணையில் இருந்து பாசனத்திற்காக தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப் பட்டு வருகிறது. பேச்சிப் பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 20.19 அடியாக இருந்தது. அணைக்கு 1,262 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 585 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 40.80 அடியாக உள்ளது. அணைக்கு 742 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.

    அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. மாவட் டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 41.8, பெருஞ்சாணி 15.4, சிற்றாறு 1-27.6, சிற்றார் 2-12.8, களியல் 3.8, கன்னிமார் 2.4, புத்தன்அணை 15, சுரு ளோடு 3, பாலமோர் 21.6, மாம்பழத்துறையாறு 2, திற்பரப்பு 4, முள்ளங்கினா விளை 3.2.

    Next Story
    ×