search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கேரளாவுக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
    X

    கேரளாவுக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

    • களியல் வனசரக அலுவலகம் பகுதியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • 2 நாட்களுக்கு முன்பு தான் கேரளாவுக்கு கடத்த முயன்ற 7½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு அதிக அளவு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க உணவு பொருள் கடத்தல் பிரிவு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகி றார்கள். உணவுப்பொருள் கடத்தல் பிரிவு இயக்குனர் வன்னிய பெருமாள் உத்தர வின்பேரில் மதுரை மண்டல உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சூப்பிரண்டு விஜய கார்த்திக் ராஜ் தலை மையில் குமரி மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு சோதனை நடந்து வருகிறது. களியல் வனசரக அலுவலகம் பகுதியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த மினி டெம்போ ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் சாக்கு மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதை யடுத்து போலீசார் அதி லிருந்த 4000 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த னர். மேலும் ரேஷன் அரிசியை கடத்தி வந்த தெள்ளாந்தியை சேர்ந்த மகாராஜன் (வயது 29), வினோத் பாபு (27) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்தியபோது ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கொண்டு சென்றதாக தெரிவித்தனர். ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா என்ற கோணத்தி லும் விசாரணை நடத்தப் பட்டது. இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.ரேசன் அரிசியை கடத்தி வந்த வாகன உரிமையாளர் சாம்ராஜ், கேரளாவை சேர்ந்த அன்வர் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் கேரளாவுக்கு கடத்த முயன்ற 7½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் மேலும் 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×