search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் திருட்டு போன ரூ.42 லட்சம் மதிப்புள்ள 300 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு - போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வழங்கினார்
    X

    குமரி மாவட்டத்தில் திருட்டு போன ரூ.42 லட்சம் மதிப்புள்ள 300 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு - போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வழங்கினார்

    • தற்போது சுமார் ரூ. 42 லட்சம் மதிப்புள்ள 300 செல்போன்கள் கண்டு பிடிக்கப்பட்டது.
    • 3 பேர் சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 17 செல்போன்கள் கைப் பற்றப்பட்டுள்ளது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்க ளிலும் செல்போன் தொலைந்து போனதாக பல்வேறு புகார் மனுக்கள் பெறப்பட்டது. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உத்தர விட்டார்.

    அதன்படி சைபர் கிரைம் போலீசார், காணாமல் போன செல்போன்களை மீட்கும் பணியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வரு கின்றனர். அந்த வகையில் தற்போது சுமார் ரூ. 42 லட்சம் மதிப்புள்ள 300 செல்போன்கள் கண்டு பிடிக்கப்பட்டது.

    அவ்வாறு கண்டு பிடிக்க ப்பட்ட செல்போன்களை போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உரிய நபர்களிடம் இன்று ஒப்ப டைத்தார். செல்போன்களை கண்டுபிடிக்க காரணமான சைபர் கிரைம் பிரிவு போலீ சாரையும் அவர் வெகுவாக பாராட்டினார்.

    மேலும் செல்போன் காணாமல் போன தாக பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது துரித நட வடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இந்த வருடத்தில் மட்டும் சுமார் ரூ.87 லட்சம் மதிப்புள்ள 622 செல்போன்கள் கண்டு பிடிக்கப்பட்டு உரியவர்க ளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தெரிவித்தார்.

    மேலும் மாவட்டத்தில் தொடர்ந்து செல்போன் பறிப்பில் ஈடுப்பட்டு வந்த 3 பேர் சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 17 செல்போன்கள் கைப் பற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் தெரியாத நபரிடமிருந்து செல்போன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். அது குற்ற சம்ப வத்தில் சம்மந்தப்பட்ட செல்போனாக இருக்கலாம்.

    மேலும் பொதுமக்கள் செல்போன்களை தவற விட்டாலோ, அல்லது திருட்டு போனாலோ அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் உடனடியாக புகார் அளிக்கவேண்டும். இல்லையெனில் ( https://eservices.tnpolice.gov.in ) என்ற காவல் துறை இணைய தளத்திலும் தங்க ளது புகாரை பதிவு செய்ய லாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×