என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தெரிசனங்கோப்பு பகுதியில் 3 டன் ரேசன் அரிசி பறிமுதல்
    X

    தெரிசனங்கோப்பு பகுதியில் 3 டன் ரேசன் அரிசி பறிமுதல்

    • குமரி மாவட்டம் வழியாக ரேசன் அரிசி, மண்எண்ணை போன்றவை கடத்தப்பட்டு வருகிறது.
    • ரேசன் அரிசியை பறிமுதல் செய்து நாகர்கோவில் கோணம் கிடங்கில் ஒப்படைத்தனர்.

    பூதப்பாண்டி, ஆக.12-

    தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு குமரி மாவட்டம் வழியாக ரேசன் அரிசி, மண்எண்ணை போன்றவை கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் நாகர்கோவில் உணவு கடத்தல் பிரிவு தனி தாசில்தார் சுரேஷ்குமார் மற்றும் வருவாய் ஆய்வாளர் அனில்குமார் ஆகியோர் தெரிசனங்கோப்பு பகுதியில் வாகன தணிக்கை யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டெம்போவை மறித்து சோதனை செய்தனர்.

    அப்போது டிரைவர் டெம்போவை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். மேலும் அந்த டெம்போவில் சோதனை செய்தபோது அதில் கேர ளாவிற்கு கொண்டு செல்வ தற்காக 3 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து டெம்போவை பறிமுதல் செய்தனர்.

    மேலும் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து நாகர்கோவில் கோணம் கிடங்கில் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×