search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்கலை அருகே ஆலயத்தில் திருடிய கொள்ளையர்கள் 3 பேர் கைது
    X

    தக்கலை அருகே ஆலயத்தில் திருடிய கொள்ளையர்கள் 3 பேர் கைது

    • மாதா சொரூபத்தில் கிடந்த 7 பவுன் தங்க செயினை பறித்து சென்று தலைமறைவாகி விட்டனர்.
    • 3 பேரை பிடித்து சென்று தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.

    கன்னியாகுமரி :

    பத்மநாபபுரம் ஆர்.சி. தெருவில் பரலோக மாதா அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு கடந்த 29-ந்தேதி நள்ளிரவில் வந்த மர்ம திருடர்கள் ஆலய வலதுபுற கதவை உடைத்து உள்ளே புகுந்து மாதா சொரூபத்தில் கிடந்த 7 பவுன் தங்க செயினை பறித்து சென்று தலைமறைவாகி விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து ஊர் தலைவர் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகார் அடிப்படையில் தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தி கைரேகை நிபுணர்கள், கைரேகைகளை பதிவு செய்தனர்.

    பின்னர் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு மர்ம நபர்களை பிடிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது.

    சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் தலைமையிலான போலீஸ் படையினர் கடந்த 4 நாட்களாக கொள்ளை யர்களை பிடிக்க கன்னியா குமரி மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று தக்கலை அருகே உள்ள புலியூர்குறிச்சி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக ஒரே பைக்கில் வந்த 3 பேர் மீது சந்தேகம் கொண்ட தனிப்படை போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி வாகனத்தை சோதனையிட்டு விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக மாறி மாறி பதில் கூறினர்.

    இதனால் சந்தேகம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் தனிப்படையினர் அவர்களை பிடித்து சென்று தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணை அடிப்படை யில் 3 பேரும் சேர்ந்து மாதா சொரூபத்தில் கிடந்த செயினை திருடியதை ஒப்புக்கொண்டனர். போலீசாரால் கைது செய்யப்பட்ட 3 பேரும் களக்காடு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த சதீஷ் (26), தென்காசி வேதகோவில் தெருவை சேர்ந்த நவீன் ஆண்டனி ராஜா (24), ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த வினித் (20) என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் திருச்செந்தூர், களக்காடு, சுசீந்திரம், தக்கலை ஆகிய பகுதிகளில் பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்க தாகும்.

    தொடர்ந்து மாதா சொரூபத்திலிருந்து திருடிய 7 பவுன் தங்கச் செயினை போலீசார் அவர்களிடம் இருந்து மீட்டனர். தொடர்ந்து 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

    Next Story
    ×