search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூதப்பாண்டியில் கஞ்சாவுடன் 3 பேர் கைது; ரூ.12,200 பறிமுதல் - வங்கி கணக்குகள் முடக்கம்
    X

    பூதப்பாண்டியில் கஞ்சாவுடன் 3 பேர் கைது; ரூ.12,200 பறிமுதல் - வங்கி கணக்குகள் முடக்கம்

    • 4 சப்- டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. பூதப்பாண்டி சப்- இன்ஸ்பெக்டர் சுந்தர் ராஜ் தலைமையிலான போலீசார் வரகுணமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவும் ரூ.12,200 ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கஞ்சா குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் மாவட் டத்தில் உள்ள 4 சப்- டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. பூதப்பாண்டி சப்- இன்ஸ்பெக்டர் சுந்தர் ராஜ் தலைமையிலான போலீசார் வரகுணமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகப்படும் படியாக நின்ற 3 நபர் களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தனர். சந்தேகம் அடைந்த போலீ சார் அவர்களது வாக னத்தை சோதனை செய்த போது அதில் கஞ்சா இருந் தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் மூன்று பேரையும் பிடித்து பூதப்பாண்டி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஈசாந்தி மங்கலத்தைச் சேர்ந்த ஷாஜின் (வயது 20), அந்தரபுரத்தை சேர்ந்த அர்ஜுன் (19), சுதனேஷ் (20) என்பது தெரியவந்தது.

    இவர்களிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவும் ரூ.12,200 ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 3 பேரின் வங்கி கணக்கு களை முடக்கி போலீ சார் நடவடிக்கை மேற்கொண்ட னர். ஷாஜின் மற்றும் அவரது தந்தை தாயாரின் வங்கி கணக்குகளை போலீசார் முடக்கியுள்ளனர்.மேலும் அர்ஜுன், சுதனேசனின் வங்கி கணக்குகளும் முடக்கப் பட்டுள்ளது.

    இந்த வழக்கில் இறச்ச குளத்தைச் சேர்ந்த ராஜ வேல் என்பவர் தலை மறைவானார். அவரை பிடிக்க போலீசார் நடவ டிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். கைது செய்யப்பட்ட ஷாஜின், அர்ஜுன், சுதனேசனிடம் போலீசார் விசாரணை மேற் கொண்டுள்ளனர். கஞ்சா எங்கிருந்து வாங்கி வரப் பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×