search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தை 3 நாட்களில் 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்
    X

    கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தை 3 நாட்களில் 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்

    • சூரியன் உதயமாகும் காட்சியை காண இன்று அதிகாலையில் கடற் கரையில் திரண்ட கூட்டம்
    • திருவள்ளுவர் சிலையை 25 ஆயிரத்து 400 சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு உள்ளனர்.

    கன்னியாகுமரி :

    சர்வதேச சுற்றுலாதலமான கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது.

    இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். கடந்த 29 மற்றும் 30-ந் தேதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தொடர்விடுமுறை இன்று மே தின விடுமுறை என 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்த தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது. சுற்றுலாப்பயணிகள் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் ஆர்வமுடன் சென்று பார்வையிட்டு வருகின்றனர். இந்த தொடர் விடுமுறையை யொட்டி கடந்த 29-ந்தேதி முதல்-இன்றுவரை 3 நாட்கள் தொடர் விடுமுறையில் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை 25 ஆயிரத்து 400 சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு உள்ளனர்.

    இதில் கடந்த 29-ந்தேதி சனிக்கிழமை அன்று 8 ஆயிரத்து 600 பேரும் ஞாயிற்றுகிழமை விடுமுறை நாளான நேற்று 9 ஆயிரத்து 800 பேரும் மே தின தினமான இன்று இதுவரை 7 ஆயிரம் பேரும் படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது கோடை காலம் என்பதால் கன்னியாகுமரியில் சூரியன் உதயமாகும் காட்சி தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இதனால் கோடை கன்னியாகுமரியில் கோடை விடுமுறை சீசன்களை கட்டி உள்ளது. கன்னியா குமரி கடலில் இன்று அதிகாலை சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர்

    Next Story
    ×