search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் 25 லட்சம் பக்தர்கள் தரிசனம்
    X

    கன்னியாகுமரி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் 25 லட்சம் பக்தர்கள் தரிசனம்

    • ஜனவரி மாதம் 27-ந்தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
    • ஜூலை மாதம் நேற்று வரை 11 ஆயிரத்து 893 பேரும் தரிசனம் செய்துள்ளனர்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந்தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். இது வரை 25 லட்சம் பக்தர்கள் திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் தரிசனம் செய்துள்ளனர்.

    இந்த திருப்பதி வெங்க டாஜலபதி கோவில் திறக்கப்பட்ட 2019-2020-ம் ஆண்டில் 9 லட்சத்து 78 ஆயிரத்து 465 பேரும், 2020-2021-ம் ஆண்டில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 805 பேரும், 2021-2022-ம் ஆண்டில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 352 பேரும், 2022-2023-ம் ஆண்டில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 548 பேரும் தரிசனம் செய்துள்ளனர்.

    இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 77 ஆயிரத்து 684 பேரும், மே மாதம் 1 லட்சத்து 9 ஆயிரத்து 865 பேரும், ஜூன் மாதம் 64 ஆயிரத்து 651 பேரும் தரிசனம் செய்துள்ளனர்.

    இந்த ஜூலை மாதம் நேற்று வரை 11 ஆயிரத்து 893 பேரும் தரிசனம் செய்துள்ளனர். இந்த தகவலை கன்னியாகுமரி திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×