search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களியக்காவிளை அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்த 2 பேர் கைது
    X

    களியக்காவிளை அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்த 2 பேர் கைது

    • 30 மது பாட்டில்கள் பறிமுதல்
    • இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    களியக்காவிளை அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் களியக்காவிளை போலீசார், படந்தாலுமூடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்ற 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்த போது 30 மது பாட்டில் இருந்தது தெரியவந்தது. படந்தாலுமூடு, குழித்துறை பகுதிகளில் அவர்கள் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர்கள் படந்தாலுமூடு பகுதியை சேர்ந்த கணேசன், குழித்துறையை சேர்ந்த ஜீவன் என்பதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    Next Story
    ×