என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
களியக்காவிளை அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்த 2 பேர் கைது
Byமாலை மலர்26 July 2023 7:27 AM GMT
- 30 மது பாட்டில்கள் பறிமுதல்
- இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி :
களியக்காவிளை அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் களியக்காவிளை போலீசார், படந்தாலுமூடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்ற 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்த போது 30 மது பாட்டில் இருந்தது தெரியவந்தது. படந்தாலுமூடு, குழித்துறை பகுதிகளில் அவர்கள் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர்கள் படந்தாலுமூடு பகுதியை சேர்ந்த கணேசன், குழித்துறையை சேர்ந்த ஜீவன் என்பதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X