என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வடசேரியில் கஞ்சா, போதை மாத்திரை வைத்திருந்த 2 பேர் கைது - போலீசை தாக்க முயன்றதாக வழக்கு
- கஞ்சா மற்றும் குட்கா விற்பனை செய்பவர்களை கைது செய்து அவர்களது வங்கி கணக்குகளையும் முடக்கி வருகிறார்கள்.
- அரசு பணி செய்ய விடாமல் தடுத்தல் கொலை மிரட்டல் விடுத்தல் கஞ்சா விற்பனை செய்தல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு
நாகர்கோவில் :
குமரி மாவட்டம் முழுவ தும் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப் டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் தனி படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு உள்ளனர்.
கஞ்சா மற்றும் குட்கா விற்பனை செய்பவர்களை கைது செய்து அவர்களது வங்கி கணக்குகளையும் முடக்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் வடசேரி சப்-இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் தலைமையிலான போலீசார் வடசேரி அறுகுவிளை பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு சந்தேகப்படும்படியாகநின்ற இரண்டு வாலிபர்களை பிடித்தனர்.
பிடிபட்டவர்களை சோதனை செய்த போது அவர்களிடம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது.இதையடுத்து போலீசார் பிடிபட்ட இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் இருவரும் போலீசை தகாத வார்த்தையால் பேசியதுடன் தாக்க முயன்றனர். மேலும் கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை வடசேரி போலீஸ் நிலை யத்திற்கு கொண்டு வந்து விசாரித்த போது பிடிப ட்டவர்கள் கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 21) என்பதும் மற்றொருவர் அறுகுவிளை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் மீது அரசு பணி செய்ய விடாமல் தடுத்தல் கொலை மிரட்டல் விடுத்தல் கஞ்சா விற்பனை செய்தல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்டவர்களின் வங்கி கணக்குகளை முடக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்