search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.160-க்கு விற்பனை
    X

    நாகர்கோவில் மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.160-க்கு விற்பனை

    • காய்கறிகளின் விலை மீண்டும் உயர்ந்தது
    • பீன்ஸ் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது

    நாகர்கோவில் :

    தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக தக்காளி யின் விலை ஏறுமுக மாக இருந்து வருகிறது. குமரி மாவட்டத்தி லும் தக்காளி யின் விலை அதிகமாக உள்ளது.

    தக்காளியின் விலை அதிகரித்து வருவதையடுத்து அதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண் டது. ரேஷன் கடைகளில் தக்காளி சப்ளை செய் யப்பட்டு வந்தது. நாகர்கோவில் நகரில் ஒரு சில ரேசன் கடைகளில் சில நாட்கள் மட்டுமே தக்காளி சப்ளை செய்யப் பட்டு வந்த நிலையில் தற்போது அங்கு தக்காளி சப்ளை செய்யப் படவில்லை. நாகர்கோவில் மார்க்கெட்டு களில் தக்காளி யின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது.

    ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்கப்பட்ட நிலையில் மீண்டும் விலை உயர தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிலோ தக்காளி ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று கிலோ ரூ.10 உயர்ந்து ரூ.140 ஆனது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் கிலோ ரூ.20 உயர்ந்து ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தக்காளி விலை உயர்வுக்கு மிக முக்கிய காரணம் வெளியூர்களில் இருந்து வரும் தக்காளிகளின் வரத்து குறைவாக உள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பெங்களூரில் இருந்து வழக்கமாக வரக்கூடிய தக்காளியை விட மிக குறை வான அளவில் தக்காளிகள் விற்பனைக்கு வருகிறது.

    உள்ளூர் பகுதிகளில் இருந்தும் தக்காளி விற்பனைக்கு வரவில்லை. இதனால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரி கள் தெரிவித்துள்ளனர். பூண்டு விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ ரூ. 180-க்கு விற்கப்பட்ட பூண்டு நேற்று ரூ.200 ஆக உயர்ந்தது. இன்று மேலும் ரூ.20 உயர்ந்து கிலோ ரூ.220-க்கு விற்பனை ஆனது. கேரட், பீன்ஸ் விலைகள் கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது.

    பீன்ஸ் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட் டது. இதேபோல் மற்ற காய்கறிகளின் விலையும் சற்று உயர்ந்து உள்ளது. நாகர்கோவில் மார்க்கெட் டில் விற்பனையான காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:-

    கேரட் ரூ.75, பீன்ஸ் ரூ.100, கத்தரிக்காய் ரூ.50, வழுதலங்காய் ரூ.50, முட்டைக்கோஸ் ரூ.30, சேனை ரூ.70, மிளகாய் ரூ.80, தக்காளி ரூ.160, இஞ்சி ரூ.280, பூண்டு ரூ.220, சின்ன வெங்காயம் ரூ.120, தடியங்காய் ரூ.30, பூசணிக்காய் ரூ.30, வெள்ளரிக்காய் ரூ.20, புடலங்காய் ரூ.30, வெண்டைக்காய் ரூ.50-க்கு விற்கப்பட்டது.

    காய்கறி விலை உயர்வால் இல்லத்தரசிகள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தக்காளியை பொறுத்த மட்டில் அதன் பயன்பாட்டை குறைத்து வருகிறார்கள். முன்பு ஒரு கிலோ தக்காளியை வாங்கி செல்லும் பொதுமக்கள் தற்போது 100 கிராம் தக்காளியை வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×