search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் மழைக்கு மேலும் 14 வீடுகள் இடிந்து சேதம்
    X

    குமரி மாவட்டத்தில் மழைக்கு மேலும் 14 வீடுகள் இடிந்து சேதம்

    • மாம்பழத்துறையாறு. சோழன் திட்டை அணைகள் முழு கொள்ளளவை எட்டி விட்டன
    • அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப் பட்டு வருகிறது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    சிற்றாறு-1, சிற்றாறு-2 மற்றும் மாம்பழத்துறையாறு. சோழன் திட்டை அணைகள் முழு கொள்ளளவை எட்டி விட்டன. இதனால் அந்த அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப் பட்டு வருகிறது.

    பேச்சிப்பாறை, பெரு ஞ்சாணி அணைகளு க்கும் தண்ணீர் வரத்து அதிக மாகவே உள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் தற்போது 41.91 அடியாக உள்ளது. 77 அடி கொள்ள ளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 71.70 அடி நீர்மட்டம் உள்ளது.

    பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 354 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 172 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பெருஞ்சாணி அணைக்கு விநாடிக்கு 372 கன அடி தண்ணீர் வரும் நிலையில் 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    வழக்கமாக அணையின் முழு கொள்ளளவில் 6 அடி குறைவாக தண்ணீர் இருக்கும் போது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். தற்போது பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் அந்த குறிப்பிட்ட அளவை நெருங்கி வருவதால், பொதுப்பணித்துறையினர் அணைகளுக்கு வரும் நீர்வரத்ைத 24 மணி நேரமும் கண்காணித்து வரு கின்றனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வரும் நிலையில் பொய்கை அணை மட்டும் நீர் வரத்து இல்லாமல் உள்ளது.42.65 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் 8.60 அடியே நீர்மட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    நேற்றும் மாவட்டத்தில் சாரல் மழை பெய்தது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.கொட்டாரத்தில் அதிகபட்சமாக 16 மில்லி மீட்டர் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது.

    இதற்கிடையில் கல்குளம் தாலுகாவில் நேற்று ஒரே நாளில் மழைக்கு 14 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளன. ஏற்கனவே 125-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×