என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் சுதந்திர தினத்தைெயாட்டி 1200 போலீசார் பாதுகாப்பு அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடந்தது
    X

    குமரி மாவட்டத்தில் சுதந்திர தினத்தைெயாட்டி 1200 போலீசார் பாதுகாப்பு அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடந்தது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் கலெக்டர் அரவிந்த் தேசியக்கொடி ஏற்றி வைக்கிறார்
    • மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள களியக்காவிளை ஆரல்வாய்மொழி அஞ்சுகிராமம் சோதனைச் சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பை பலப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் :

    75வது சுதந்திர தின விழா வருகிற 15-ந்தேதி கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் கலெக்டர் அரவிந்த் தேசியக்கொடி ஏற்றி வைக்கிறார். இதைத் தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.

    கொரோனா பரவல் காரண மாக கடந்த 2 ஆண்டு களாக கலை நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டு சுதந்திர தினத்திற்கு கண் கவர் கலை நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளது. பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    சுதந்திர தினவிழா நிகழ்ச்சிக்கான முன்னேற் பாடு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. அண்ணா விளையாட்டு அரங்கம் சீர மைப்பு பணிகள் நடந்து வருகிறது. மேலும் போலீ சாரின் அணிவகுப்பு ஒத்தி கை நிகழ்ச்சியும் இன்று நடந்தது.

    நாகர்கோவில் மறவன் குடியிருப்பில் உள்ள ஆயுதப் படை மைதானத்தில் போலீ சாரின் அணிவகுப்பு ஒத்தி கை நிகழ்ச்சி நடந்தது. சுதந்திரதினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முக்கிய சந்திப்பு களிலும் சோதனை சாவடி களிலும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர்.

    ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நாகர்கோவில் கன்னியாகுமரி குழித்துறை இரணியல் நாங்குநேரி ரயில் நிலையங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரு கிறது. கோவில்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடு வதற்கு ஏற்பாடுகள் செய் யப்பட்டு வருகிறது.

    மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள களியக்காவிளை ஆரல்வாய்மொழி அஞ்சுகிராமம் சோதனைச் சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பை பலப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் போலீசார் ரோந்து சுற்றி வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.கடலோர காவல் படையினர் நவீன படகுகளில் கண் காணிப்பு பணியை மேற் கொள்வார்கள்.

    Next Story
    ×