என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருஞ்சாணியில் 12 மில்லி மீட்டர் மழை
    X

    பெருஞ்சாணியில் 12 மில்லி மீட்டர் மழை

    • திற்பரப்பு அருவி பகுதியிலும் லேசான சாரல் மழை பெய்தது.
    • சாரல் மழை பெய்ததையடுத்து அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது

    நாகர்கோவில் :

    குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் நேற்று பெருஞ்சாணி அணை பகுதிகளில் மழை பெய்தது. பெருஞ்சாணியில் அதிகபட்சமாக 12 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியிலும் லேசான சாரல் மழை பெய்தது. அங்கு 7.8 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    சாரல் மழை பெய்ததையடுத்து அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கும் மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    Next Story
    ×