search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா
    X

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா

    • நவராத்திரி திருவிழா நாளை தொடங்குகிறது
    • நள்ளிரவு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த திருவிழா அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. விழாவையொட்டி தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 11-30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் மதியம் 12 மணிக்கு அன்னதானமும் மாலை 6:30 மணிக்கு சாயராட்சை தீபாராதனையும்நடக்கிறது. 1-ம் திருவிழாவானநாளை காலை 6.15 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் அம்பாள் கொலுமண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. 8 மணிக்கு பஜனையும் மாலை 5.30 மணிக்கு மங்கள இசையும் ஆறு மணிக்கு ஆன்மீக அருளுரையும் 6.30 மணிக்கு சிறப்பு பட்டிமன்றமும் இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளிக்கலைமான் வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும் நடக்கிறது.

    2-ம் திருவிழாவான (27-ந்தேதி) மாலை 6 மணிக்கு சமய உரையும் 6.30 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளிக்கலைமான் வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும்நடக்கிறது. 3-ம் திருவிழாவான (28-ந்தேதி) மாலை 6மணிக்கு ஆன்மீக உரையும் 6.30 மணிக்கு பரதநாட்டியமும் இரவு 9மணிக்கு அம்மன் வெள்ளிக்கலைமான் வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும்நடக்கிறது. 4-ம் திருவிழாவான 29-ந்தேதி மாலை 6மணிக்கு ஆன்மீக உரையும் இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் 9 மணிக்கு அம்மன் வெள்ளிக் கலைமான் வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும் நடக்கிறது.

    5-ம் திருவிழாவான (30-ந்தேதி) மாலை 6 மணிக்கு ஆன்மீக உரை யும் இரவு 7 மணிக்கு நாட்டிய நடன நிகழ்ச்சியும் 9 மணிக்கு அம்மன் வெள்ளிக்காம தேனு வாகனத்தில் எழுந்த ருளி பவனி வருதலும் நடக்கிறது. அப்போது இலங்கையை சேர்ந்த அறங்காவலர் டாக்டர் செந்தில்வேள் தலைமையில் இலங்கை பக்தர்கள் அம்மன் எழுந்தருளியிருக்கும் வாகனத்தின் மீது கூடை கூடையாக மலர் தூவி வழிபடுகிறார்.

    6-ம் திருவிழாவான (1-ந்தேதி) காலை 10 மணிக்கு நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஆன்மீக உரையும் 6-30 மணிக்கு பக்தி மெல்லிசை கச்சேரியும் இரவு 9மணிக்கு அம்மன் வெள்ளிக்கலைமான் வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும் நடக்கிறது. 7-ம் திருவிழாவான 2-ந்தேதி மாலை 6 மணிக்கு ஆன்மீக உரையும் இரவு 7 மணிக்கு பக்தி பஜனையும் ஒன்பது மணிக்கு அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் எழுந்திருளி பவனி வருதலும் நடக்கிறது.

    8-ம் திருவிழாவான (3-ந்தேதி) மாலை 6 மணிக்கு ஆன்மீக உரையும் இரவு 7 மணிக்கு வயலின் இன்னிசை கச்சேரியும் 9மணிக்கு அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும் நடக்கிறது. 9-ம் திருவிழாவான4-ந்தேதி மாலை 6 மணிக்கு ஆன்மீக உரையும் இரவு 7 மணிக்கு பக்தி கர்நாடக இசைப் பாட்டும் 9 மணிக்கு அம்மன் வெள்ளிக்கலைமான் வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும் நடக்கிறது.

    10-ம் திருவிழாவான (5-ந்தேதி) காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள்அலங்காரமண்டபத்தில்அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    அதை தொடர்ந்து மதியம் 11-30 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்கா ரத்துடன் மகாதானபுரம் நோக்கி பரிவேட்டைக்கு ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடக் கிறது.

    கோவிலில் இருந்து புறப்படும் இந்த ஊர்வலம் கன்னியாகுமரி சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி, மெயின் ரோடு, ரெயில் நிலைய சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, ஒற்றைபுளி சந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, பரமத்தலிங்கபுரம், தங்க நாற்கர சாலை ரவுண்டானா சந்திப்பு வழியாக மகா தானபுரத்தில் உள்ள வேட்டை மண்டபத்தை மாலை சென்று அடைகிறது. அங்கு பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது.

    பின்னர் மகாதானபுரம் பஞ்சலிங்கபுரம் ஆகிய கிராமங்களில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. வீதி உலா முடிந்ததும் அம்மன் வெள்ளி பல்லக்கில் கன்னி யாகுமரிக்கு புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. அங்கு நள்ளிரவு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

    அதன் பிறகு வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் கள் நிர்வாகம் மற்றும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் இணைந்து செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×