search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலக சாதனை நிகழ்ச்சியாக 73 திட்ட பலன்கள்
    X

    உலக சாதனை நிகழ்ச்சியாக 73 திட்ட பலன்கள்

    • இன்று பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி நடைபெற்றது
    • ஒரே இடத்தில் கிடைக்க கவுன்சிலர் அய்யப்பன் ஏற்பாடு

    என்.ஜி.ஓ.காலனி :

    பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படு வதையொட்டி நாகர்கோவில் மாநகராட்சி 50-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜவான் அய்யப்பன் ஏற்பாட்டில் நாகர்கோவில் அருகே உள்ள முகிலன்விளை முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பிரதமர் மோடி கொண்டு வந்த 73 திட்டங்களும் ஒரே இடத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

    முகாமில் வேலைவாய்ப்பு, மருத்துவம், சிறுதானிய உணவுகள், கண் சிகிச்சை, பொதுமருத்துவம், பெண்களுக்கான மருத்துவ சிகிச்சை, மருத்துவ காப்பீட்டு அட்டை பெற நடவடிக்கை, பான் கார்டு பெற நடவடிக்கை, விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாய பொருட் கள் கிடைக்க நடவடிக்கை, விவசாயம் செய்ய விவசாய நிலத்தின் மண் பரிசோதனை, இலவச கியாஸ் இணைப்பு பெறாதவர்களுக்கு இலவச கியாஸ் அடுப்பு பெற்று தருதல், இலவச வீடு கிடைக்காதவர்களுக்கு இலவச வீடு பெற்று தர ஏற்பாடு செய்தல் ஆகிய வற்றுக்கான நடவடிக்கை உள்ளிட்ட உதவிகள் ஒரே இடத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதில் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், வேலை வாய்ப்பு சம்பந்தப்பட்ட நபர்கள் என அனைவரும் பங்கேற்றனர். வார்டுக்கு ட்பட்ட பொதுமக்கள் அனை வரும் உலக சாதனை முயற்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பயனடையும்படி நாகர்கோ வில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஜவான் அய்யப் பன் கேட்டுகொண்டுள்ளார்.

    Next Story
    ×