search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குலசேகரம் அருகே அரசு பள்ளியில் குடிநீர் பைப்புகள் திருட்டு
    X

    கோப்பு படம் 

    குலசேகரம் அருகே அரசு பள்ளியில் குடிநீர் பைப்புகள் திருட்டு

    • மர்ம நபர்கள் கைவரிசை
    • புகாரின் பேரில் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே செருப்பாலூரில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது.

    இப்பள்ளியில் உபயதாரர்கள் சார்பில் மாணவிகள் கை கழுவும் பகுதியில் 6 ஸ்டீல் குழாய்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் 3 நாட்கள் தொடர் விடுமுறைக்குப் பின்னர் பள்ளி ஆசிரியர்களும், மாணவ- மாணவிகளும் நேற்று காலையில் பள்ளிக்கு வந்த போது மாணவிகள் கைகழுவும் இடத்தில் பொருத்தப் பட்டிருந்த 6 குழாய்கள் திருடப் பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    மேலும் கழிவறையினுள்ள பைப் இணைப்புகளும் திருடப்பட்டிருந்தது. ஏற்கனவே கடந்த வருடம் அக்டோபர் மாதம் இது போன்று இப்பள்ளியில் மாணவர்கள் கைகழுவும் இடத்தில் பொருத்தப் பட்டிருந்த 6 ஸ்டீல் குழாய்கள் திருட்டுப் போயிருந்தன.

    இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சித்தார்தன் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    அந்த பள்ளியின் அருகில் உள்ளவர்களிடமும் விசாரனை நடத்தி வருகிறார்கள். திருட்டில் ஈடுப்பட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×