என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மகள் தூங்கியது தெரியாமல் பஸ்சில் 8 வயது சிறுமியை விட்டு சென்ற பெற்றோர்
- போக்குவரத்து கழக அதிகாரிகள் துரித நடவடிக்கையால் மீட்கப்பட்டார்
- பஸ் டிரைவர், கண்டக்டர் அந்த சிறுமியை அவர்களிடம் ஒப்படைத்தனர்.
நாகர்கோவில்:
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் 14 பேர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்திருந்தனர்.
கன்னியாகுமரியில் சுற்றி பார்த்துவிட்டு அவர்கள் ஊருக்கு செல்வதற்காக தயாரானார்கள். இதை யடுத்து கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவிலுக்கு அரசு பஸ்சில் வந்தனர்.பஸ் வடசேரி பஸ் நிலை யத்தை வந்ததும் பஸ்சி லிருந்து அனைவரும் இறங்கினார்கள். பஸ்சை விட்டு இறங்கிய சிறிது நேரத்தில் 8 வயது சிறுமியை காணவில்லை என்று அவர்கள் கூச்சலிட்டனர். இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போக்கு வரத்து கழக அதிகாரிகள் மற்றும் போலீசார் அவர்களி டம் சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது பஸ்சிலிருந்து சிறுமி மாயமானது குறித்த தகவலை தெரிவித்தனர். உடனே போக்குவரத்து கழக அதிகாரிகள் அவர்கள் பயணம் செய்த பஸ்ஸின் விபரங்களை கேட்டு அறிந்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட பஸ் டிரைவர் மற்றும் கண்டக்ட ரை தொடர்பு கொண்டு பேசினார்கள்.
அப்போது பஸ் வடசேரியில் இருந்து மீண்டும் கன்னியாகுமரிக்கு சென்று கொண்டிருப்பதாகவும் தற்போது அண்ணா பஸ் நிலையத்தில் நிற்பதாகவும் தெரிவித்தனர்.போக்கு வரத்துக் அதிகாரிகள் அந்த சிறுமி பஸ்சில் இருக்கிறாரா? என்று பார்க்குமாறு கண்டக்டரிடம் தெரிவித்தனர். உடனே கண்டக்டர் பஸ்ஸின் இருக்கைகளில் பார்த்தார். அப்போது சிறுமி பஸ்ஸின் இருக்கையில் தூங்கிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. உடனே அந்த சிறுமியை மீட்டனர்.
இதுகுறித்து அவரது பெற்றோருக்கும் உறவி னர்களுக்கும் தகவல் தெரி விக்கப்பட்டது. சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவி னர்கள் அண்ணா பஸ் நிலையத்திற்கு வந்த னர். பஸ் டிரைவர், கண்டக்டர் அந்த சிறுமியை அவர்களி டம் ஒப்படைத்தனர். அதி காரிகளின் துரித நடவ டிக்கையை பொதுமக்கள் பாராட்டினார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்