search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் அருகே கட்டிட தொழிலாளி திடீர் சாவு
    X

    கோப்பு படம் 

    இரணியல் அருகே கட்டிட தொழிலாளி திடீர் சாவு

    • போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
    • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே வில்லுக்குறி குளுமைக்காடை பகுதியை சேர்ந்தவர் எஸ்தாக் (வயது 58), கட்டிட தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று முன்தினம் குடிபோதையில் எஸ்தாக் வீட்டிற்கு வந்தார். பின்னர் இரவு தூங்க சென்றார். நேற்று காலை அவரது மனைவி எஸ்தாக்கை எழுப்பியபோது அவர் மயங்கிய நிலையில் இருந்தார்.

    உடனடியாக உறவினர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்சில் உள்ள டாக்டர்கள் எஸ்தாக்கை பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து எஸ்தாக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக எஸ்தாக் மகள் சுஜி (27) கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    Next Story
    ×