search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டங்கள்
    X

    கோப்பு படம் 

    மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டங்கள்

    • ‘தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்’ திட்டத்தின் மூலம், கிராமப்புற பெண்கள், இளைஞர்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை
    • கலெக்டர் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் ஊரக வாழ்வாதார இயக்கம், மத்திய, மாநில அரசின் 60:40 என்ற நிதி விகிதாச்சார அடிப்படையில் 'தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்' என்ற திட்டமாக செயல்படுத்தப்பட்டு வரு கிறது. இத்திட்டத்தின் மூலம், கிராமப்புற பெண்கள், இளைஞர்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்க ளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இத்துடன் 'ஊரக இளை ஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்குவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. இந்த திட்டத்தின் கீழ், 18 முதல் 35 வயதிற் குட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில் சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி, நிலையான வருமானம் ஈட்டும் வகையில் பயிற்சி வழங்கப்படும், கன்னியா குமரி மாவட்டத்திலும் இத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் சுகா தார பராமரிப்பு, ஆயத்த ஆடை வடிவமைப்பு, ஆட் டோமோட்டிவ், சில்லரை வணிகம், தளவாடங்கள், கட்டுமானத் துறை, அழ குக் கலை, தகவல் தொழில் நுட்பம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் போன்ற எளிதில் வேலைவாய்ப்பு பெற இயலும் 120-க்கு மேற் பட்ட தொழில் பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு ஏற்படுத் தப்படுகிறது. மொத்த பயிற்சி ஒதுக்கீட்டில், சமூக ரீதியாக பின்தங்கியுள்ள பிரிவினரான பட்டியலி னத்தினருக்கு 62 சதவீதம், மலைவாழ் பழங்குடியின ருக்கு 3 சதவீதம் மற்றும் சிறுபான்மையினருக்கு 16 சதவீதம் என சிறப்பு ஒதுக் கீடு அளித்து பயிற்சி வழங் கப்படுகிறது.

    குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் கொண்ட குறுகிய கால பயிற்சிகள், உணவு, தங்குமிட வசதி, சீருடை, பயிற்சி உபகர ணங்கள், கணினி பயிற்சி மற்றும் பயிற்சிக்குப்பின் திறன் பயிற்சி குழுமம் மூலம் வழங்கப்படும் பயிற்சி சான்றிதழ் ஆகிய வசதிகளுடன் எவ்வித கட் டணமும் இன்றி இலவச மாக வழங்கப்படுகிறது.

    பயிற்சிக்கு பின் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்ப டும். விருப்பமுள்ள இளை ஞர்களுக்கு பயிற்சிக்கு ஏற்ப சில இனங்களில் அயல்நாடு களிலும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது. இப்பயிற்சியை அளிப்ப தற்கு தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களி லும் மொத்தம் 130 பயிற்சி நிறுவனங்கள் அங்கீகரிக் கப்பட்டு பல்வேறு பயிற் சிகள் வழங்கி வருகின்றன.

    நடப்பாண்டில் மொத்தம் 500 இளைஞர்களுக்கு பயிற் சியளிக்க இலக்கு நிர்ணயிக் கப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்பும் இளைஞர் கள், கன்னியாகுமரி மாவட் டத்தில் உள்ள 'மகளிர் திட்டம்' என்று அழைக் கப்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக் கத்தின் அலுவலகத்தையோ அல்லது ஒவ்வொரு வட் டாரத்திலும் செயல்பட்டு வரும் வட்டார இயக்க மேலாண்மை அலுவல கத்தையோ அணுகி விவ ரங்களை பெற்று பயிற் சியில் சேர்ந்து பயன் அடையலாம்.

    மேலும், ஒவ்வொரு வட்டாரத்திலும் நடை பெறும் இளைஞர் திறன் திருவிழாவில் பங்கேற் றும் விருப்பமான பயிற் சியை தேர்வு செய்து பயன்பெறலாம். எனவே தகுதியும் விருப்பமும் உள்ள கிராமப் பகுதி யைச் சேர்ந்த இருபால் இளைஞர்கள் தங்களின் கல்வித் தகுதிக்கேற்ப விருப்பமான, தொழில் பிரிவை தேர்வு செய்து வேலை வாய்ப்பு பெற்று பயனடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×