search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் அருகே கார் மோதி முதியவர் படுகாயம்
    X

    கார் சுவற்றில் மோதி நிற்பதை படத்தில் காணலாம்.

    இரணியல் அருகே கார் மோதி முதியவர் படுகாயம்

    • இரணியல் போலீசில் புகார்
    • தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள நெய்யூர் தெற்குதெருவை சேர்ந்தவர் சியாம் தம்புஜி (வயது 87). இவர் புத்தாண்டு அன்று நள்ளிரவில் ஆராதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நெய்யூர் தெற்கு தெரு வழியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று சியாம் தம்புஜியை உரசி தள்ளி விட்டு அருகில் உள்ள வீட்டின் காம்பவுண்ட் சுவர் மீது மோதி நின்றது. கார் டிரைவர் அங்கிருந்து தப்பி சென்றார். இந்த விபத்தில் வீட்டின் காம்பவுண்ட் சுவர் சேதமடைந்தது. மேலும் சியாம் தம்புஜி பலத்த காயமடைந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெய்யூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து நெய்யூர் சி.எஸ்.ஐ ஆலய செயலாளர் ஜேக்கப் ஜெயக்குமார் (73) இரணியல் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×