என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணக்குடியில் கிரிக்கெட் விளையாடியதில் மோதல்
    X

    கோப்பு படம் 

    மணக்குடியில் கிரிக்கெட் விளையாடியதில் மோதல்

    • 10 பேர் மீது வழக்கு
    • போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    மணக்குடியில் கிரிக்கெட் விளையாடியது தொடர்பாக இரு தரப்பினருக்கிடையே பிரச்சினை இருந்து வந்தது.இது தொடர்பாக மோதல் ஏற்பட்டது.

    இது குறித்து மணக்குடி யைச் சேர்ந்த தோமஸ் (வயது 40) என்பவர் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் மணக்குடியைச் சேர்ந்த சுபின் (25), ஆன்றனி (32), சுனாமி காலனியைச் சேர்ந்த அகில் (23), ஷியாம் (25), நிகில் (20) ஆகிய 5 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதேபோல் மணக்குடி வின்சென் மேற்கு தெருவை சேர்ந்த ஆண்டனி கொடுத்த புகாரின் பேரில் சர்ச் தெருவை சேர்ந்த தாமஸ் (40), ராபின் (35), அகில் (21), டேவிட் (45), சூசை ஆகிய 5 பேர் மீதும் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இரு தரப்பினர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 147, 148, 294பி, 323, 506 2 ஐ.பி.சி. ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×