search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலகிருஷ்ணன்புதூரில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்
    X

    கோப்பு படம் 

    மேலகிருஷ்ணன்புதூரில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்

    • ரவுடி உள்பட 3 பேர் மீது கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
    • காயம் அடைந்த சிவசந்திரேஸ்வரனை மீட்டு ஈத்தாமொழி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

    கன்னியாகுமரி:

    மேலகிருஷ்ணன்புதூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவசந்திரேஸ்வரன் (வயது 64), ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இவர் ஊர் துணைத்தலைவராக இருந்து வருகிறார்.

    இந்நிலையில் சிவசந்தி ரேஸ்வரன் நேற்று மாலை மேலகிருஷ்ணன்புதூர் பத்திரகாளி அம்மன் கோவில் பின்புறம் அவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை பூட்டி சாவியை வண்டியின் டேங்கவரில் வைத்துவிட்டு ஊர் தலைவர் சுகுமாரனிடம் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த மேலகிருஷ்ணன்புதூர் அருகே உள்ள செம்பொன்க ரையை சேர்ந்த சுபாஷ் (21), அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் மற்றும் ஒருவர் சேர்ந்து சிவசந்திரேஸ்வரன் மோட்டார் சைக்கிளை எடுத்துள்ளனர்.இதனை அறிந்த அவர் என்னுடைய மோட்டார் சைக்கிளை ஏன் எடுக்கிறீர்கள் என்று கேட்டார்.

    இதனால் அவர்கள் 3 பேரும் சேர்ந்து சிவசந்தி ரேஸ்வரனை அவதூறாக பேசி, கையில் வைத்திருந்த கம்பியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த சிவசந்திரேஸ்வரன் வலியால் அலறி துடித்தார்.

    இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். காயம் அடைந்த சிவசந்திரேஸ்வரனை மீட்டு ஈத்தாமொழி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட்செல்வசிங் தாக்குதலில் ஈடுபட்ட சுபாஷ், ரஞ்சித் மற்றும் ஒருவர் என 3 பேர் மீதும் கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவர்கைள தேடி வருகின்றனர்.

    இதில் சுபாஷ் மீது ஏற்கனவே கொலை உள்பட பல்வேறு வழக்கு கள் சுசீந்திரம் போலீஸ் நிலை யத்தில் உள்ளது. மேலும் இவர் ரவுடி பட்டியலிலும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×