search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரல்வாய்மொழி பிரபல ரவுடி கொலை
    X

    கோப்பு படம் 

    ஆரல்வாய்மொழி பிரபல ரவுடி கொலை

    • தலைமறைவாக உள்ள 4 பேர் நெல்லையில் பதுங்கல்
    • தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை

    நாகர்கோவில்:

    ஆரல்வாய்மொழி அருகே உள்ள அனந்த பத்மநாத புரத்தை சேர்ந்தவர் ராஜ் குமார் (வயது 34), பிரபல ரவுடி. இவர், கடந்த 16-ந்தேதி நண்பர்களுடன் மது அருந்திவிட்டு வந்த போது வழிமறித்த கும்பல் ராஜ்குமாரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டது. இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத் தினார்கள். கொலையாளி களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட் டது.

    தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் சூப் கடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கொலை நடந்திருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து இந்த கொலை வழக்கு தொடர்பாக தாழக்குடி பகுதியைச் சேர்ந்த பிரவீன் (23), நாகர்கோவில் ஆசாரி மார் தெருவை சேர்ந்த ராம சித்தார்த் (26) ஆகிய 2 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது பிரவீன் கூறுகையில், சூப் கடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ராஜ்குமார் என்னையும் எனது நண்ப ரையும் கொன்று விடுவ தாக மிரட்டினார். இதனால் நாங்கள் முந்திக் கொண் டோம் என்று கூறினார்.

    இதையடுத்து போலீ சார் பிரவீனையும் ராம சித்தார்த்தையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். இருவரும் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த கொலை வழக்கில் மேலும் 4 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. 4 பேரை யும் பிடிக்க போலீ சார் நடவடிக்கை மேற்கொண் டுள்ளனர். போலீசார் தேடு வது அறிந்து அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.

    அவர்கள் தற்போது நெல்லை மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற் கொண்டுள்ளனர்.

    Next Story
    ×