என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆரல்வாய்மொழி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்
- டெம்போ டிரைவர் பலி
- பொங்கல் பண்டிகையையொட்டி பெற்றோரை பார்க்க சென்றபோது பரிதாபம்
கன்னியாகுமரி:
ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன் புதூர் இல்லத்தார் தெருவை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் இசக்கியப்பன் (வயது 38), தோவாளை பூ மார்க்கெட்டில் டெம்போ ஒட்டி வந்தார்.
இவருக்கு திருமணமாகி மனைவி குழந்தைகளுடன் துவரங்காட்டில் வசித்து வருகிறார். பொங்கல் பண்டிகையையொட்டி ஆரல்வாய்மொழியில் உள்ள தனது தாய் தந்தையரை பார்த்து ஆசீர்வாதம் வாங்கு வதற்காக இசக்கியப்பன் தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். அவ்வையார் அம்மன் கோவில் பகுதி யில் இசக்கியப்பன் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி இசக்கியப்பன் மீது மோதியது. இதில் இசக்கியப்பன் தூக்கி வீசப்பட்டார்.
தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயமடைந்த அவரது உடலில் இருந்து ரத்தம் கொட்டியது.சிறிது நேரத்தில் இசக்கியப்பன் பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் ஆரல்வாய் மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.பிணமாக கிடந்த இசக்கியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து இசக்கியப் பனின் உறவினர் குமார் கொடுத்த புகாரின் பேரில் லாரி டிரைவர் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த சோனைசாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்