search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரல்வாய்மொழியில் திருமண மண்டப உரிமையாளருக்குகொலை மிரட்டல் விடுத்த வாலிபர்
    X

    கோப்பு படம் 

    ஆரல்வாய்மொழியில் திருமண மண்டப உரிமையாளருக்குகொலை மிரட்டல் விடுத்த வாலிபர்

    • ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார்
    • வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடுகிறார்கள்

    கன்னியாகுமரி:

    ஆரல்வாய் மொழியில் சோதனை சாவடி அருகே திருமண மண்டபம் நடத்தி வருபவர் முருகானந்தம். இவர், ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஆவார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமண மண்டபத்தில் ஆரல்வாய்மொழி வடக்கூர் இசக்கி மகன் மீனாட்சி சுந்தரம் என்பவர் தகராறு செய்து பொருட்களை உடைத்துள்ளார் இதை தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த வாலிபர் நேற்று முன்தினம் வடக்கூர் சன்னதி தெருவில் அமைந்துள்ள முருகானந்தத்திற்கு சொந்தமான வீட்டை கல்வீசி தாக்கியுள்ளார். சத்தம் கேட்ட முருகானந்தம் வெளியே வந்து தட்டி கேட்டபோது மீனாட்சி சுந்தரம் கொலை மிரட்டல் விடுத்து தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகார் அடிப்படையில் போலீசார் மீனாட்சி சுந்தரம் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×