search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒப்பந்ததாரருக்கு  ரூ.25 ஆயிரம் அபராதம்
    X

    கோப்பு படம் 

    ஒப்பந்ததாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

    • நுகர்வோர் குறை தீர் ஆணையம் உத்தரவு
    • ஒரு மாத காலத்திற்குள் வழங்கவேண்டும்

    நாகர்கோவில்:

    குலசேகரம் அருகே குளச்ச விளாகம் பகுதியை சேர்ந்த வர் வின்சென்ட். இவர் கச்சக்கோட்டுவிளையில் உள்ள ஒரு ஒப்பந்தகாரரிடம் 1,600 சதுர அடியில் ஒரு வீடு கட்டி தர கேட்டுக் கொண்டார். இதற்காக சுமார் ரூ.16,69,000-ஐ ஒப்பந்ததாரரிடம் வின்சென்ட் கொடுத்தார். ஒப்பந்தத்தில் கூறியபடி வீட்டின் கட்டுமானம் இல்லை.

    இதற்கிடையே அந்த ஒப்பந்ததாரா் உரிமம் இல்லாத ஒப்பந்தகாரர் என்றும் தரமில்லாத பொருட்களை கொண்டு வீடு கட்டியதும் தெரிய வந்துள்ளது. மேலும் ஒரு கட்டிட கலை நிபுணரைக் கொண்டு ஆய்வு செய்து அறிக்கை பெற்றதில் மேற்படி ஒப்பந்தகாரர் கூடுதலாக ரூ.3,99,000 பெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது.

    இதனால் மனவேதனை அடைந்த வின்சென்ட் இதுபற்றி சம்பந் தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் கேட்டுள்ளார். ஆனால் சரியான பதில் இல்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை என தெரிகிறது. பின்னர் வின்சென்ட், வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பி யும் உரிய பதில் கிடைக்க வில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வின்சென்ட் மாவட்ட நுகர் வோர் குறைதீர் ஆணை யத்தில் வழக்கு தொடர்ந் தார்.

    வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் ஒப்பந்தகாரரின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட வின்சென்டிடம் அதிகமாக பெற்ற ரூ.3,99,000, அபராதமாக ரூ.25 ஆயிரம் மற்றும் ரூ.5 ஆயிரம் வழக்கு செலவு ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்கவேண்டும் என உத்தரவிட்டனர்.

    Next Story
    ×