search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாழ்ந்து காட்டுவோம் திட்ட இணை மானிய திட்டம்- கலெக்டர் தொடங்கி வைத்தார்
    X

    காஞ்சிபுரம் கலெக்டர்

    வாழ்ந்து காட்டுவோம் திட்ட இணை மானிய திட்டம்- கலெக்டர் தொடங்கி வைத்தார்

    • இணை மானிய திட்டம் தொடர்பான வழிகாட்டி நெறிமுறை கையேட்டை காஞ்சிபுரம் கலெக்டர் வெளியிட்டு பேசினார்.
    • மின்னணு பணபரிவர்த்தனைகள் போன்ற சேவைகள் வழங்கி இணை மானிய திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் வங்கியாளர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்களுக்கு இணை மானிய திட்டம் குறித்த கருத்தரங்கை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் இணை மானிய திட்டம் தொடர்பான வழிகாட்டி நெறிமுறை கையேட்டை வெளியிட்டு பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில்:-

    தமிழக அரசு உலக வங்கி நிதி உதவியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறையின் மூலம் செயல்படுத்தி வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஊரக பகுதிகளில் தொழில் முனைவோர்களை உருவாக்குதல், நிதி சேவைக்கு வழிவகுத்தல் மற்றும் நிலையான வேலை வாய்ப்பினை உருவாக்குதல் போன்ற நோக்கங்களை அடிப்படையாக கொண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 101 ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் தனிநபர் மற்றும் குழு தொழில்களுக்கு தொழில் திட்ட மதிப்பீட்டில் 30 சதவீதம் அதிகபட்சமாக ரூ.40 லட்சம் வரை மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கும் இணை மானிய திட்டம் என்ற செயல்பாடு செயல்படுத்தப்பட உள்ளது.

    மேலும் தொழில் புரிய ஆர்வமுள்ளவர்களை கண்டறிந்து வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள மகளிர் வாழ்வாதார சேவை மையம் மூலம் தொழில் முனைவோருக்கான ஆலோசனை வழங்குதல், தொழில் திட்டம் மற்றும் முன்மொழிவு தயார் செய்திட உதவி செய்தல், தொழில் தொடங்க தேவையான பதிவு சான்றுகள் மற்றும் ஆவணங்கள் பெற்று தருதல், மற்றும் மின்னணு பணபரிவர்த்தனைகள் போன்ற சேவைகள் வழங்கி இணை மானிய திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது.

    மேலும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் வழங்கப்படும் இணைமானிய திட்டத்தை ஊரக பகுதிகளில் உள்ள தொழில் முனைவோர்களுக்கு வங்கி கடன் வழங்கி ஊரக பகுதிகளில் தொழில் வளம் மற்றும் வேலைவாய்ப்பை பெருக்கிட வங்கியாளர்கள் தொழில் முனைவோருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் செயல் அலுவலர் தினகர் ராஜ்குமார், முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வெங்கடேசன், மகளிர் திட்ட அலுவலர் செல்வராஜ் மற்றும் வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×