search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி மாணவி மறைவிற்கு   அனைத்து கட்சி சார்பில் மலரஞ்சலி
    X

    நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்.

    கள்ளக்குறிச்சி மாணவி மறைவிற்கு அனைத்து கட்சி சார்பில் மலரஞ்சலி

    • பள்ளி மாணவி ஸ்ரீமதி மறைவுக்கு அனைத்து கட்சியினர், பொதுநல அமைப்பினர் சார்பில் மலரஞ்சலி செலுத்தினர்.
    • மற்றும் அனைவரும் மலரஞ்சலி செலுத்தி, மெழுகுவர்த்தி ஏந்தியவாறு மவுன அஞ்சலி செலுத்தினர்.

    குமாரபாளையம்:

    கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மறைவுக்கு அனைத்து கட்சியினர், பொதுநல அமைப்பினர் சார்பில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடைபெற்றது.

    ஸ்ரீமதியின் உருவப்ப டத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, அனைவரும் மலரஞ்சலி செலுத்தி, மெழுகுவர்த்தி ஏந்தியவாறு மவுன அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிகழ்விற்கு பொதுநல கூட்டமைப்பின் செயலர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். தி.மு.க. நகர செயலாளர் செல்வம், ரவி, அ.தி.மு.க. நகர செயலாளர் பாலசுப்ரமணி, ரவி, பாஸ்கரன், காங்கிரஸ் சிவராஜ், தங்கராஜ், கோகுல்நாத், சிவகுமார், தே.மு.தி.க. மாவட்ட துணை செயலர் மகாலிங்கம், நகர செயலாளர் நாராயணசாமி, ம.தி.மு.க. விஸ்வநாதன், சி.பி.ஐ, சி.பி.எம்., விடியல் ஆரம்பம் பிரகாஷ், தளிர்விடும் பாரதம் சீனிவாசன், சேவற்கொடியோர் பேரவை பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×