என் மலர்
காஞ்சிபுரம்
மாமல்லபுரத்துக்கு புதிய பஸ்நிலையம் கட்ட வரைபடம் தயாரித்துள்ளனர். இது குறித்து மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் உதவி கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் திறந்த வெளியில் இயங்கி வரும் பஸ் நிலையத்தில் போதிய வசதிகள் இல்லாமல் சுற்றுலா பயணிகள் உள்ளூர் மக்களும் நீண்ட காலமாக அவதிபட்டு வந்தனர்.
இதனால் 1992-ம் ஆண்டு புதிய பஸ் நிலையம் கட்ட கருகாத்தம்மன் கோவில் அருகே 6.08 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இத்திட்டம் 25 ஆண்டுகளாக இழு பறியில் கிடப்பில் கிடந்த நிலையில் தற்போது மத்திய பொதுப்பணித்துறையினர் கோயம்பேடு மாதிரியான கலை நயத்துடன் பிரமாண்டமான இரண்டு அடுக்கு பஸ் நிலையம் கட்ட வரைபடம் தயாரித்துள்ளனர்.
கட்டபோகும் இடத்தை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் உதவி கலெக்டர் ஜெயசீலன் நேரில் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசணை நடத்தினார். 25 ஆண்டு கால புதிய பஸ் நிலைய கனவு நினைவாக போவதால் சுற்றுலா பயணிகளும் உள்ளூர் மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மாமல்லபுரத்தில் திறந்த வெளியில் இயங்கி வரும் பஸ் நிலையத்தில் போதிய வசதிகள் இல்லாமல் சுற்றுலா பயணிகள் உள்ளூர் மக்களும் நீண்ட காலமாக அவதிபட்டு வந்தனர்.
இதனால் 1992-ம் ஆண்டு புதிய பஸ் நிலையம் கட்ட கருகாத்தம்மன் கோவில் அருகே 6.08 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இத்திட்டம் 25 ஆண்டுகளாக இழு பறியில் கிடப்பில் கிடந்த நிலையில் தற்போது மத்திய பொதுப்பணித்துறையினர் கோயம்பேடு மாதிரியான கலை நயத்துடன் பிரமாண்டமான இரண்டு அடுக்கு பஸ் நிலையம் கட்ட வரைபடம் தயாரித்துள்ளனர்.
கட்டபோகும் இடத்தை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் உதவி கலெக்டர் ஜெயசீலன் நேரில் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசணை நடத்தினார். 25 ஆண்டு கால புதிய பஸ் நிலைய கனவு நினைவாக போவதால் சுற்றுலா பயணிகளும் உள்ளூர் மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
காஞ்சீபுரம்:
தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், காந்தி பேரவை-பூரண மதுவிலக்கு பாதயாத்திரைக்குழு தலைவருமான குமரி அனந்தன் மதுவிலக்கை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இவர் நேற்று காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு வந்தார். அவரை காஞ்சீபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுந்தரமூர்த்தி, நகரத்தலைவர் ஆர்.வி.குப்பன் உள்பட நிர்வாகிகள் வரவேற்றனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து குமரிஅனந்தன் பேசினார்.
அப்போது, ‘மதுநீர் கூடாது என்று நடைபயணம் மேற்கொண்டிருக்கும் நான் நதிநீர் வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டுபவன். நம் நாடு தன்னிறைவு பெற்ற நாடாக வேண்டும் என்றால் தண்ணீரை சரியாக எல்லா இடங்களிலும் கிடைக்க செய்ய வேண்டும். நதிகளை இணைத்தால் 14,500 கி.மீட்டருக்கு நீர்வழிப்பாதை கிடைக்கும். எனவே மத்திய அரசு அவசர அவசிய பணியாக நதிகளை இணைப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
குமரி அனந்தன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், காஞ்சீபுரத்தில் தியாகி கிருஷ்ணசாமி சர்மாவுக்கு சிலை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், காந்தி பேரவை-பூரண மதுவிலக்கு பாதயாத்திரைக்குழு தலைவருமான குமரி அனந்தன் மதுவிலக்கை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இவர் நேற்று காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு வந்தார். அவரை காஞ்சீபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுந்தரமூர்த்தி, நகரத்தலைவர் ஆர்.வி.குப்பன் உள்பட நிர்வாகிகள் வரவேற்றனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து குமரிஅனந்தன் பேசினார்.
அப்போது, ‘மதுநீர் கூடாது என்று நடைபயணம் மேற்கொண்டிருக்கும் நான் நதிநீர் வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டுபவன். நம் நாடு தன்னிறைவு பெற்ற நாடாக வேண்டும் என்றால் தண்ணீரை சரியாக எல்லா இடங்களிலும் கிடைக்க செய்ய வேண்டும். நதிகளை இணைத்தால் 14,500 கி.மீட்டருக்கு நீர்வழிப்பாதை கிடைக்கும். எனவே மத்திய அரசு அவசர அவசிய பணியாக நதிகளை இணைப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
குமரி அனந்தன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், காஞ்சீபுரத்தில் தியாகி கிருஷ்ணசாமி சர்மாவுக்கு சிலை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
நீட் தேர்வு குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
ஆலந்தூர்:
தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் மாணவர்கள் பிளஸ்-2 தேர்வுகளை முடிக்கும் தருவாயில் உள்ள நிலையில் ‘நீட்’ தேர்வு அறிவிக்கப்பட்டு இருப்பதால் பெரும் அளவில் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். இதனை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மீத்தேன் திட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என மத்்திய அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இந்த பிரச்சினையை தி.மு.க. கையில் எடுக்கும். தமிழக அரசும் இந்த திட்டத்தை அனுமதிக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் மாணவர்கள் பிளஸ்-2 தேர்வுகளை முடிக்கும் தருவாயில் உள்ள நிலையில் ‘நீட்’ தேர்வு அறிவிக்கப்பட்டு இருப்பதால் பெரும் அளவில் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். இதனை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மீத்தேன் திட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என மத்்திய அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இந்த பிரச்சினையை தி.மு.க. கையில் எடுக்கும். தமிழக அரசும் இந்த திட்டத்தை அனுமதிக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
சிறுதாவூரில் கங்கை அமரன் பங்களா உள்பட 112 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக சசிகலா மீது அளிக்கப்பட்ட புதிய புகாரின் அடிப்படையில் காஞ்சீபுரம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள சிறுதாவூர், பையனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் நிலங்கள் வாங்கியதில் மோசடி நடந்திருப்பதாக தற்போது புதிய புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அறப்போர் இயக்கம் சார்பில் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் கடந்த மாதம் (பிப்ரவரி) 9-ந்தேதி அளிக்கப்பட்ட புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
சிறுதாவூர் பகுதியில் சசிகலா குடும்பத்தினர் பல்வேறு நபர்களிடம் இருந்து வாங்கிய 112 ஏக்கர் நிலம் முறைகேடாக வாங்கப்பட்டுள்ளது. அங்கு நிலம் வைத்திருந்தவர்களை மிரட்டி பல்வேறு சர்வே எண்களில் பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் அரசு புறம்போக்கு நிலங்களும், குளம் குட்டைகளும் அடங்கியுள்ளன. ஓய்வு பெற்ற ராணுவ வீரரான கண்ணன் என்பவரிடமிருந்தும் அவருக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக அபகரித்துள்ளனர்.
சினிமா இயக்குனர் கங்கை அமரன் மற்றும் அவரது மனைவி மணிமேகலை பெயரில் பையனூர் கிராமத்தில் இருந்த 22 ஏக்கர் நிலமும் அபகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடந்த 2000-ம் ஆண்டு காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதுபற்றி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.
அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான ஜெயராமன் வெங்கடேசன் என்பவரே இந்த புகார் மனுவை அளித்திருந்தார்.
சசிகலா மீதான புகார் பற்றி விசாரணை நடத்த காஞ்சீபுரம் மாவட்ட நில அபகரிப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து நில அபகரிப்பு பிரிவு போலீசார் இது தொடர்பாக விசாரணையை தொடங்கி உள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான கண்ணன் மற்றும் அறப்போர் இயக்கத்தை சேர்ந்த ஜெயராமன் வெங்கடேசன் ஆகியோர் தாங்கள் அளித்த புகார் தொடர்பாக மேலும் தகவல்களை தெரிவிப்பதற்காக காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள அபகரிப்பு பிரிவுக்கு வந்திருந்தனர். அங்கு புகார்தாரரான கண்ணனிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சசிகலாவுக்கு எதிரான புகார் மனுவில் கூறப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் போலீசார் விசாரணையை நடத்தி வருகிறார்கள். இந்த புகாரின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
கங்கை அமரனுக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தில் அவர் கட்டியிருந்த பங்களாவும் இருந்தது. இதனோடு சேர்த்து தான் 112 ஏக்கர் நிலத்தை சசிகலா தரப்பினர் அபகரித்துள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாவை பறி கொடுத்தது பற்றி இயக்குனரும் இசை அமைப்பாளருமான கங்கை அமரனும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரபரப்பாக குற்றம் சாட்டி இருந்தார்.
நான் எனது பங்களாவை இழப்பதற்கு சசிகலாவே காரணம் என்றும், அதனை விற்கமாட்டேன் என்று தொடர்ந்து கூறி வந்த நிலையிலும் என்னிடம் இருந்து மிரட்டி பங்களாவை பறித்துக் கொண்டனர் என்று கூறி இருந்தார்.
இந்த பரபரப்பு அடங்கும் முன்னரே சசிகலா மீதான நில அபகரிப்பு புகாரை போலீசாரை விசாரிக்க தொடங்கி இருப்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள சிறுதாவூர், பையனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் நிலங்கள் வாங்கியதில் மோசடி நடந்திருப்பதாக தற்போது புதிய புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அறப்போர் இயக்கம் சார்பில் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் கடந்த மாதம் (பிப்ரவரி) 9-ந்தேதி அளிக்கப்பட்ட புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
சிறுதாவூர் பகுதியில் சசிகலா குடும்பத்தினர் பல்வேறு நபர்களிடம் இருந்து வாங்கிய 112 ஏக்கர் நிலம் முறைகேடாக வாங்கப்பட்டுள்ளது. அங்கு நிலம் வைத்திருந்தவர்களை மிரட்டி பல்வேறு சர்வே எண்களில் பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் அரசு புறம்போக்கு நிலங்களும், குளம் குட்டைகளும் அடங்கியுள்ளன. ஓய்வு பெற்ற ராணுவ வீரரான கண்ணன் என்பவரிடமிருந்தும் அவருக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக அபகரித்துள்ளனர்.
சினிமா இயக்குனர் கங்கை அமரன் மற்றும் அவரது மனைவி மணிமேகலை பெயரில் பையனூர் கிராமத்தில் இருந்த 22 ஏக்கர் நிலமும் அபகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடந்த 2000-ம் ஆண்டு காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதுபற்றி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.
அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான ஜெயராமன் வெங்கடேசன் என்பவரே இந்த புகார் மனுவை அளித்திருந்தார்.
சசிகலா மீதான புகார் பற்றி விசாரணை நடத்த காஞ்சீபுரம் மாவட்ட நில அபகரிப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து நில அபகரிப்பு பிரிவு போலீசார் இது தொடர்பாக விசாரணையை தொடங்கி உள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான கண்ணன் மற்றும் அறப்போர் இயக்கத்தை சேர்ந்த ஜெயராமன் வெங்கடேசன் ஆகியோர் தாங்கள் அளித்த புகார் தொடர்பாக மேலும் தகவல்களை தெரிவிப்பதற்காக காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள அபகரிப்பு பிரிவுக்கு வந்திருந்தனர். அங்கு புகார்தாரரான கண்ணனிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சசிகலாவுக்கு எதிரான புகார் மனுவில் கூறப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் போலீசார் விசாரணையை நடத்தி வருகிறார்கள். இந்த புகாரின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
கங்கை அமரனுக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தில் அவர் கட்டியிருந்த பங்களாவும் இருந்தது. இதனோடு சேர்த்து தான் 112 ஏக்கர் நிலத்தை சசிகலா தரப்பினர் அபகரித்துள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாவை பறி கொடுத்தது பற்றி இயக்குனரும் இசை அமைப்பாளருமான கங்கை அமரனும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரபரப்பாக குற்றம் சாட்டி இருந்தார்.
நான் எனது பங்களாவை இழப்பதற்கு சசிகலாவே காரணம் என்றும், அதனை விற்கமாட்டேன் என்று தொடர்ந்து கூறி வந்த நிலையிலும் என்னிடம் இருந்து மிரட்டி பங்களாவை பறித்துக் கொண்டனர் என்று கூறி இருந்தார்.
இந்த பரபரப்பு அடங்கும் முன்னரே சசிகலா மீதான நில அபகரிப்பு புகாரை போலீசாரை விசாரிக்க தொடங்கி இருப்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அரசு பஸ் மோதி கொத்தனார் பலியான இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவான்மியூர்:
திருவாரூர் குடவாசல் வடவேடு கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 45). சென்னையில் தங்கியிருந்து கொத்தனார் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் திரும்பினார். தரமணி 100 அடி சாலை பாரதி நகர் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது மாநகர பஸ் அவர் மீது மோதியது. இதில் ரவி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவர் சரவணனை கைது செய்தனர். இவர் வந்தவாசி வடமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்.
குன்றத்தூரில் இன்று மாலை மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் துரைமுருகன், ஜெகத்ரட்சகன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
சென்னை:
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாக தி.மு.க.வினர் கொண்டாடி வருகின்றனர்.
இதையொட்டி காஞ்சி வடக்கு மாவட்டத்தில் கடந்த 1 மாதமாக பொதுக்கூட்டம், பட்டிமன்றம், கருத்தரங்கம், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
குன்றத்தூர் பெரிய தெருவில் இன்று மாலை மாபெரும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் செய்து வருகிறார். கூட்டத்தில் கழக முதன்மை செயலாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன், மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் சிறப்புரையாற்றுகிறார்கள்.
இதில் குன்றத்தூர் ஒன்றிய கழக செயலாளர் படப்பை ஆ.மனோகரன், பேரூர் கழக செயலாளர் கே.கே.ராசமாணிக்கம், மாவட்ட பிரதிநிதி சத்தியமூர்த்தி, மாங்காடு செயலாளர் பட்டூர் ஜவருல்லா வரவேற்று பேசுகிறார்கள்.
குன்றத்தூர் ஒன்றிய தி.மு.க.-பேரூர் தி.மு.க. இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை முன்னின்று கவனித்து வருகின்றனர்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாக தி.மு.க.வினர் கொண்டாடி வருகின்றனர்.
இதையொட்டி காஞ்சி வடக்கு மாவட்டத்தில் கடந்த 1 மாதமாக பொதுக்கூட்டம், பட்டிமன்றம், கருத்தரங்கம், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
குன்றத்தூர் பெரிய தெருவில் இன்று மாலை மாபெரும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் செய்து வருகிறார். கூட்டத்தில் கழக முதன்மை செயலாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன், மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் சிறப்புரையாற்றுகிறார்கள்.
இதில் குன்றத்தூர் ஒன்றிய கழக செயலாளர் படப்பை ஆ.மனோகரன், பேரூர் கழக செயலாளர் கே.கே.ராசமாணிக்கம், மாவட்ட பிரதிநிதி சத்தியமூர்த்தி, மாங்காடு செயலாளர் பட்டூர் ஜவருல்லா வரவேற்று பேசுகிறார்கள்.
குன்றத்தூர் ஒன்றிய தி.மு.க.-பேரூர் தி.மு.க. இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை முன்னின்று கவனித்து வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் கல்லூரி மாணவி பாதுகாப்பு படை வீரர் கன்னத்தில் அறைந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலந்தூர்:
அகமதாபாத்தை சேர்ந்த கல்லூரி மாணவிகள் பசாந்தி உள்பட 3 பேர் ஆராய்ச்சி படிப்பு சம்பந்தமாக சென்னை வந்து இருந்தனர். நேற்று மாலை அவர்கள் மீண்டும் அகமதாபாத் செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு வந்தனர்.
உள்நாட்டு முனையம் 4-வது நுழைவு வாயிலில் சென்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் அபிலேஷ்குமார் மாணவிகளிடம் விமான டிக்கெட்டை காண்பிக்குமாறு தெரிவித்தார்.
ஏற்கனவே விமான நிலையத்துக்கு தாமதமாக வந்ததால் மாணவிகள் டிக்கெட்டை காண்பிக்காமல் உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை சப்- இன்ஸ்பெக்டர் அபிலேஷ் குமார் தடுத்து நிறுத்தினார். இதில் மாணவி பசாந்தி மீது லேசாக கை பட்டதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவி வாக்குவாதத்தில் ஈடுபட்டு சப்- இன்ஸ்பெக்டர் அபிலேஷ் குமார் கன்னத்தில் அறைந்தார்.
இதுகுறித்து விமான நிலைய போலீசார் மற்றும் அதிகாரிகள் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது மாணவிகளும், சப்-இன்ஸ்பெக்டரும் வருத்தம் தெரிவித்து சமாதானமாக செல்வதாக கூறினர். இச்சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அகமதாபாத்தை சேர்ந்த கல்லூரி மாணவிகள் பசாந்தி உள்பட 3 பேர் ஆராய்ச்சி படிப்பு சம்பந்தமாக சென்னை வந்து இருந்தனர். நேற்று மாலை அவர்கள் மீண்டும் அகமதாபாத் செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு வந்தனர்.
உள்நாட்டு முனையம் 4-வது நுழைவு வாயிலில் சென்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் அபிலேஷ்குமார் மாணவிகளிடம் விமான டிக்கெட்டை காண்பிக்குமாறு தெரிவித்தார்.
ஏற்கனவே விமான நிலையத்துக்கு தாமதமாக வந்ததால் மாணவிகள் டிக்கெட்டை காண்பிக்காமல் உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை சப்- இன்ஸ்பெக்டர் அபிலேஷ் குமார் தடுத்து நிறுத்தினார். இதில் மாணவி பசாந்தி மீது லேசாக கை பட்டதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவி வாக்குவாதத்தில் ஈடுபட்டு சப்- இன்ஸ்பெக்டர் அபிலேஷ் குமார் கன்னத்தில் அறைந்தார்.
இதுகுறித்து விமான நிலைய போலீசார் மற்றும் அதிகாரிகள் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது மாணவிகளும், சப்-இன்ஸ்பெக்டரும் வருத்தம் தெரிவித்து சமாதானமாக செல்வதாக கூறினர். இச்சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மணல் கடத்திய வாலிபர் 10 நாட்கள் காஞ்சீபுரம் வருவாய் ஆய்வாளரிடம் ஆஜராகி, சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று கூறி நீதிபதி நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் மாட்டு வண்டியில் மணல் கடத்தியதாக பெரிய காஞ்சீபுரம் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவரை போலீசார் காஞ்சீபுரம் குற்றவியல் நீதிமன்றம் 1-ல் ஆஜர்படுத்தினர். அப்போது சிலம்பரசன் தரப்பில் ஆஜரான வக்கீல் அவரை ஜாமீனில் விடுவிக்குமாறு மனுத்தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி மீனாட்சி மணல் கடத்திய சிலம்பரசன் 10 நாட்கள் காஞ்சீபுரம் வருவாய் ஆய்வாளரிடம் ஆஜராகி அவருடன் சென்று சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.
காஞ்சீபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் மாட்டு வண்டியில் மணல் கடத்தியதாக பெரிய காஞ்சீபுரம் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவரை போலீசார் காஞ்சீபுரம் குற்றவியல் நீதிமன்றம் 1-ல் ஆஜர்படுத்தினர். அப்போது சிலம்பரசன் தரப்பில் ஆஜரான வக்கீல் அவரை ஜாமீனில் விடுவிக்குமாறு மனுத்தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி மீனாட்சி மணல் கடத்திய சிலம்பரசன் 10 நாட்கள் காஞ்சீபுரம் வருவாய் ஆய்வாளரிடம் ஆஜராகி அவருடன் சென்று சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.
பரங்கிமலையில் பழைய ரூபாய் நோட்டுகளை துண்டு துண்டாக வெட்டி வீசியவர்கள் யார்? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ஆலந்தூர்:
பரங்கிமலையை அடுத்த மடுவாங்கரையில் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் இன்று காலை பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு குவியலாக கிடந்தது.
குப்பைகளை கொட்ட வந்த பொதுமக்கள் இதை பார்த்து பரங்கிமலை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குப்பை தொட்டியில் கிடந்த பழை ரூபாய் நோட்டுகளை கைப்பற்றினர். ரூ.2 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் இருந்தது.
மத்திய அரசு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ள அவகாசம் அளித்தது. ஆனால் சிலர் பணத்தை மாற்ற முடியாமல் இருந்தனர்.
காலஅவகாசம் முடிந்ததால் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் சட்டப்படி குற்றம் என்று அறிவிக்கப்பட்டது. எனவே அவற்றை சிலர் இது போன்று துண்டு துண்டாக வெட்டி குப்பையில் வீசி வருகிறார்கள்.
பரங்கிமலையில் பழைய ரூபாய் நோட்டுகளை துண்டு துண்டாக வெட்டி வீசியவர்கள் யார்? என்று போலீ சார் விசாரித்து வருகிறார் கள்.
பரங்கிமலையை அடுத்த மடுவாங்கரையில் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் இன்று காலை பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு குவியலாக கிடந்தது.
குப்பைகளை கொட்ட வந்த பொதுமக்கள் இதை பார்த்து பரங்கிமலை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குப்பை தொட்டியில் கிடந்த பழை ரூபாய் நோட்டுகளை கைப்பற்றினர். ரூ.2 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் இருந்தது.
மத்திய அரசு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ள அவகாசம் அளித்தது. ஆனால் சிலர் பணத்தை மாற்ற முடியாமல் இருந்தனர்.
காலஅவகாசம் முடிந்ததால் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் சட்டப்படி குற்றம் என்று அறிவிக்கப்பட்டது. எனவே அவற்றை சிலர் இது போன்று துண்டு துண்டாக வெட்டி குப்பையில் வீசி வருகிறார்கள்.
பரங்கிமலையில் பழைய ரூபாய் நோட்டுகளை துண்டு துண்டாக வெட்டி வீசியவர்கள் யார்? என்று போலீ சார் விசாரித்து வருகிறார் கள்.
சோழிங்கநல்லூர் அருகே வேன் மோதி தொழிலாளி பலியானார். இது குறித்து கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து வேன் டிரைவர் சரத்குமாரை கைது செய்தனர்.
திருவான்மியூர்:
சோழிங்கநல்லூர், காந்தி நகரை சேர்ந்தவர் செல்வம் (55) தொழிலாளி. இவர், நண்பர் ஆனந்துடன் பேசியபடி ராஜீவ்காந்தி சாலையை கடக்க முயன்றார். அப்போது கேளம்பாக்கத்தை நோக்கி சென்ற டெம்போ வேன் இருவர் மீதும் மோதியது. இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆனந்த் படுகாயம் அடைந்தார். இது குறித்து கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து வேன் டிரைவர் சரத்குமாரை கைது செய்தனர்.
பள்ளிக்கரணை, தசரதன் தெருவை சேர்ந்தவர் மதிவாணன் (42) எலக்ட்ரீசி யன். இன்று காலை அவர் மேடவாக்கத்தில் கட்டிட பணியில் ஈடுபட்டார். அப்போது மின்சாரம் தாக்கி பலியானார்.
சோழிங்கநல்லூர், காந்தி நகரை சேர்ந்தவர் செல்வம் (55) தொழிலாளி. இவர், நண்பர் ஆனந்துடன் பேசியபடி ராஜீவ்காந்தி சாலையை கடக்க முயன்றார். அப்போது கேளம்பாக்கத்தை நோக்கி சென்ற டெம்போ வேன் இருவர் மீதும் மோதியது. இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆனந்த் படுகாயம் அடைந்தார். இது குறித்து கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து வேன் டிரைவர் சரத்குமாரை கைது செய்தனர்.
பள்ளிக்கரணை, தசரதன் தெருவை சேர்ந்தவர் மதிவாணன் (42) எலக்ட்ரீசி யன். இன்று காலை அவர் மேடவாக்கத்தில் கட்டிட பணியில் ஈடுபட்டார். அப்போது மின்சாரம் தாக்கி பலியானார்.
ஜெர்மனியில் இருந்து சென்னை வந்த விமான பயணிகளிடம் நடத்திய சோதனையில் 2 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபர் ஒருவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
ஜெர்மனியில் இருந்து சென்னைக்கு நேற்று நள்ளிரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் பயணிகள் அனைவரும் வெளியே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கனடா குடியுரிமை பெற்ற சின்னத்தம்பி என்பவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து சின்னத்தம்பியை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அவர் அணிந்திருந்த கோட்டில் ரகசிய பை வைத்து அதில் 2 கிலோ தங்கம் கடத்தி வந்தது தெரிந்தது.
இதையடுத்து தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சின்னதம்பியிடம் விசாரணை நடந்து வருகிறது.
ஜெர்மனியில் இருந்து சென்னைக்கு நேற்று நள்ளிரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் பயணிகள் அனைவரும் வெளியே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கனடா குடியுரிமை பெற்ற சின்னத்தம்பி என்பவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து சின்னத்தம்பியை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அவர் அணிந்திருந்த கோட்டில் ரகசிய பை வைத்து அதில் 2 கிலோ தங்கம் கடத்தி வந்தது தெரிந்தது.
இதையடுத்து தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சின்னதம்பியிடம் விசாரணை நடந்து வருகிறது.
மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசுவதற்காக நெடுவாசல் போராட்டக்குழுவினர் டெல்லி சென்றுள்ளனர்.
ஆலந்தூர்:
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நெடுவாசல் போராட்டக்குழுவை சேர்ந்த சரவணன், செந்தில்தாஸ், சுரேஷ் உள்பட 15 கொண்ட குழுவினர் மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதானை சந்திக்க சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர்.
முன்னதாக விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர்கள் கூறியதாவது:-
நெடுவாசல், மாங்காடு, வடகாடு, கோட்டைக்காடு, அனைவயல் உள்ளிட்ட கிராமங்களில் மத்திய அரசு அறிவித்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக விலக்கி கொள்ள வேண்டும் என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானை சந்தித்து வலியுறுத்தி பேச டெல்லி செல்கிறோம்.
பொதுமக்கள் வாழும் பகுதியிலும், விவசாய பகுதிகளிலும் இருந்து இந்த திட்டம் முழுமையாக விலக்கப்பட வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையுடன் டெல்லிக்கு செல்கிறோம். வேறு எந்தவிதமான சமாதானத்திற்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம். எங்களின் ஒரே இலக்கு நெடுவாசல் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை விலக்கி கொள்ள வேண்டும்.
இந்தியா முழுவதும் 31 இடங்களில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. நெடுவாசல் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள் விவசாயத்தை நம்பி இருக்கிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தினால் நிலத்தடிநீர் பாதிக்கப்பட்டு விவசாயமும், மக்களின் வாழ்வாதாரம் அழியும். இதனால் திட்டத்தை விலக்கி கொள்ள வேண்டும் என்ற முடிவுடன் தான் செல்கிறோம். நல்ல பதில் கிடைக்கும் என நம்புகிறோம்.
நெடுவாசல் போராட்டத்தை விலக்கி கொள்ளவில்லை. தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறோம். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் போராட்டகளத்திற்கு வந்தனர். மாநில அரசு அனுமதி தராது என அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்தார்.
போராட்ட களத்தின் அருகே பள்ளியில் 10, 12-ம் வகுப்பு தேர்வு நடக்கிறது. மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தி வைத்திருக்கிறோம். எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நெடுவாசல் போராட்டக்குழுவை சேர்ந்த சரவணன், செந்தில்தாஸ், சுரேஷ் உள்பட 15 கொண்ட குழுவினர் மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதானை சந்திக்க சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர்.
முன்னதாக விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர்கள் கூறியதாவது:-
நெடுவாசல், மாங்காடு, வடகாடு, கோட்டைக்காடு, அனைவயல் உள்ளிட்ட கிராமங்களில் மத்திய அரசு அறிவித்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக விலக்கி கொள்ள வேண்டும் என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானை சந்தித்து வலியுறுத்தி பேச டெல்லி செல்கிறோம்.
பொதுமக்கள் வாழும் பகுதியிலும், விவசாய பகுதிகளிலும் இருந்து இந்த திட்டம் முழுமையாக விலக்கப்பட வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையுடன் டெல்லிக்கு செல்கிறோம். வேறு எந்தவிதமான சமாதானத்திற்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம். எங்களின் ஒரே இலக்கு நெடுவாசல் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை விலக்கி கொள்ள வேண்டும்.
இந்தியா முழுவதும் 31 இடங்களில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. நெடுவாசல் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள் விவசாயத்தை நம்பி இருக்கிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தினால் நிலத்தடிநீர் பாதிக்கப்பட்டு விவசாயமும், மக்களின் வாழ்வாதாரம் அழியும். இதனால் திட்டத்தை விலக்கி கொள்ள வேண்டும் என்ற முடிவுடன் தான் செல்கிறோம். நல்ல பதில் கிடைக்கும் என நம்புகிறோம்.
நெடுவாசல் போராட்டத்தை விலக்கி கொள்ளவில்லை. தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறோம். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் போராட்டகளத்திற்கு வந்தனர். மாநில அரசு அனுமதி தராது என அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்தார்.
போராட்ட களத்தின் அருகே பள்ளியில் 10, 12-ம் வகுப்பு தேர்வு நடக்கிறது. மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தி வைத்திருக்கிறோம். எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.






