search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாரதா கல்லூரியில் வேலைவாய்ப்பு நேர்காணல்
    X

    சாரதா கல்லூரியில் வேலைவாய்ப்பு நேர்காணல் நடைபெற்ற போது எடுத்த படம்.

    சாரதா கல்லூரியில் வேலைவாய்ப்பு நேர்காணல்

    • கல்லூரி செயலர் யத்தீஸ்வரி சரவணபவப்ரியா அம்பா முன்னிலை வகித்தார்.
    • நேர்காணலில் 31 மாணவிகள் பங்கேற்று பயன்பெற்றனர்.

    நெல்லை:

    நெல்லை சாரதா மகளிர் கல்லூரியில் தனியார் நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பு நேர்காணல் நடைபெற்றது. கல்லூரி செயலர் யத்தீஸ்வரி சரவணபவப்ரியா அம்பா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வரும், பொருளியல் துறை தலைவருமான கலாவதி வரவேற்று பேசினார்.

    தனியார் நிறுவன விநியோக தலைவர் பேச்சிமுத்து, கிருஷ்ணவேணி, அகிம்சா மூர்த்தி, கணபதி வாசுகி, அஜய் நிஷாந்த் ஆகியோர் நிறுவனம் மற்றும் நேர்காணல் குறித்து அறிமுக உரையாற்றினர். நேர்காணலில் 31 மாணவிகள் பங்கேற்று பயன் பெற்றனர். கணிதவியல் துறை தலைவரும், பயிற்சி, மாணவர் வளர்ச்சி பிரிவு தலைவருமான ரேவதி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு பிரிவு அதிகாரியும், பொருளியல் துறை பேராசிரியையுமான மிருணாதேவி செய்திருந்தார்.

    Next Story
    ×