search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆண்டிபட்டி அருகே பெண்ணிடம் நகை திருட்டு
    X

    கோப்பு படம்.

    ஆண்டிபட்டி அருகே பெண்ணிடம் நகை திருட்டு

    • கடைக்கு வந்த ஒரு வாலிபர் திடீரென பெண்ணின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடி விட்டார்.
    • இது குறித்து க.விலக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே உள்ள கருத்தமடைப்பட்டி மெயின்ரோட்டைச் சேர்ந்த தெய்வேந்திரன் மனைவி கண்ணகி (வயது 55). இவர் சம்பவத்தன்று தனது வீட்டுக்கு அருேக உள்ள பலசரக்கு கடையில் காய்கறிகள் வாங்கிக் கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த கடைக்கு வந்த ஒரு வாலிபர் திடீரென கண்ணகியின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடி விட்டார்.

    இது குறித்து க.விலக்கு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×