search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோர்ட்டு ஊழியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
    X

    பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடைப்பதை படத்தில் காணலாம்.

    கோர்ட்டு ஊழியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

    • லட்சுமணன் வலங்கைமான் நீதிமன்றத்தில் பணி புரிந்து வருகிறார்.
    • வீட்டின் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் அருகே உள்ள மணக்கோடு நல்லூர் என்ற பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன்.

    இவர் வலங்கைமான் நீதிமன்றத்தில் பணி புரிந்து வருகிறார்.

    இவரது மனைவி பாபநாசத்தில் இயங்கி வரும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் இருவரும் காலையில் வேலைக்குச் சென்று விட்டு மாலை 7 மணி அளவில் வீடு திரும்பினர்.

    அப்போது வீட்டின் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு, வீட்டிலிருந்த 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் பீரோவில் இருந்த ஐந்து பவுன் நகை மற்றும் 48,000 பணம் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது, தெரிய வந்துள்ளது.

    இது குறித்து வலங்கை மான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் பேரில் சம்பவ இடத்தை வலங்கைமான் போலீசார் பார்வையிட்டனர்.

    பின்னர் திருவாரூர் மாவட்ட கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரே கைகள் பதிவு செய்யப்பட்டது.

    இது குறித்து வலங்கை மான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×